எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வறட்சி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா கிராமத்தினருக்கும் அம்மாவின் அரசு உரிய நிவாரண நிதி வழங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி எல்லா குடும்பத்திற்கும் தலா ரூ. ஆயிரம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு, இந்த தேர்தல் முடிந்ததும் 2 ஆயிரம் ரூபாயை அம்மா அரசு வழங்கும். இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வீடு, வீடாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் 70 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நாங்கள் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்.
தி.மு.க. ஆட்சியில் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் தேவையாக இருந்தது. ஆனால் அப்போது எப்போது மின்சாரம் வரும். எப்போது போகும் என்று தெரியாத நிலை இருந்தது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இப்போது கிட்டத்தட்ட 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. மின் உற்பத்தி பெருகினால் தொழில்வளம் பெருகும். தமிழகத்தில் புதிய, புதிய தொழில்கள் வந்த வண்ணமிருக்கிறது. 3 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு 304 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சிறந்த ஆட்சியும் சிறந்த நிர்வாகமும் நடப்பதால் தான் தொழில் நிறுவனங்கள் வருகின்றன. கிட்டதட்ட 5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கிறது. 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை தந்த அரசு அம்மாவின் அரசு.
அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 256 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவிலேயே நம்முடைய குழந்தைகள் சிறப்பாக வளர வேண்டும் என்பதற்காக ஏழைத் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 18 ஆயிரம் வழங்கினார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. 18 லட்சம் தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கும் நல்ல திட்டங்களை தந்தது அம்மாவின் அரசு தான். பிறக்கும் குழந்தைகளின் இறப்பு சதவீதம் இந்தியாவில் 33 சதவீதமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு சதவீதம் 22 சதவீதமாக இருந்தது. அதை 16 சதவீதமாக குறைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உயர்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எதிர்கால தமிழகம் அறிவார்ந்த தமிழகமாக மாற வேண்டும் என்பதற்காக மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா. இதன் மூலம் மாணவர்கள் திறமையானவர்களாக அதிக மதிப்பெண் பெறுபவர்களாக மாற முடியும். இன்னும் பத்தாண்டுகளில் தமிழகம் விஞ்ஞான உலகில் மிகச் சிறந்த மாநிலமாக மாற மடிக்கணினி திட்டம் உதவும். அமெரிக்காவில் கூட இல்லாத இலவச மடிக்கணினி திட்டத்தை அறிமுகம் செய்து வழங்கியவர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சியில் இது போன்ற என்ன திட்டம் கிடைத்தது?
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விஞ்ஞான ரீதியில் பொதுமக்களிடம் பொய் வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி வருகிறார். தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்குவோம் என்று கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி வாக்குறுதி அளித்தது. அவர்களால் எப்படி தர முடியும். இது போன்ற பொய்யான வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்து தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. அம்மா அரசின் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அம்மாவின் ஆட்சியில் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மு.க. ஸ்டாலின் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வோம் என்றும், படிப்பிற்காக வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்வோம் என்றும் பச்சைப் பொய் சொன்னார். அதை செய்ய முடிந்ததா? தி.மு.க. கூட்டணியால் மத்திய ஆட்சியிலும் நுழைய முடியவில்லை. மாநில ஆட்சியிலும் நுழைய முடியவில்லை. நாங்கள் எதை செய்வோமோ அதைத்தான் சொல்வோம். இந்த நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும்தான். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சொன்னதை செய்தார்கள். அவர்களது வழியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் தருவோம். ஐ.எஸ்.ஐ. முத்திரை போல் தரமுள்ள கட்சி அ.தி.மு.க.தான். தரமில்லாத கட்சி தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது சிறப்பானதொரு ஆட்சியை நடத்தி வருகிறோம்.
தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 48.6 சதவீதமாக அதிகரித்தது. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர்கள் படிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.
இரண்டரை ஆண்டில் 6 சட்டக்கல்லூரிகளை கொண்டு வந்தது அம்மாவின் ஆட்சி தான். சட்டம் பயில மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்தது. அந்த தடையை அகற்றி ஏழை மாணவர்களும் சட்டம் படிக்கலாம் என்ற நிலையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இன்னும் 2021-ம் ஆண்டு வரை அம்மாவின் ஆட்சி இருக்கிறது. இன்னும் எண்ணற்ற திட்டங்கள் வரவிருக்கிறது.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். ஒரு மாநிலத்தில் தொழில் வளம் செழிக்க அமைதி நிலவ வேண்டும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிம்மதியை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக 2023-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தர திட்டமிட்டிருக்கிறோம். வாணியம்பாடியில் வீடில்லாத தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், உள்ளிட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.