எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.26 - மதுரையில் மாநகராட்சிக்கு சொந்தமான 8 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது போலீசில் புகார் செய்யப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் ராஜன்செல்லப்பா அறிவித்தார். மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், ஆணையாளர் (பொறுப்பு) ஆறுமுகநயினார் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசும்படி மேற்கு மண்டல தலைவர் கே.ராஜபாண்டியனை மேயர் அழைத்தார். அப்போது திமுக கவுன்சிலர் எம்.எல்.ராஜ் எழுந்து எங்களைதான் முதலில் பேச அழைக்க வேண்டும் என்றார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ராஜன்செல்லப்பா கூறும் திமுகவினருக்கு வரிசைஅடிப்படையில் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத திமுக கவன்சிலர்கள் வாயில் கருப்புதுணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து மண்டல தலைவர் கே.ராஜபாண்டியன் பேசும்போது, மதுரையில் நல்ல மழை பெய்துள்ளது. சமீபகாலமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியும், குடிநீரில் சாக்கடை கலந்தும் வருகிறது. மழைநீர் தேங்குவதை மழை வடிகால்களை மராமத்து செய்ய வேண்டும்.
மேயர்- கடந்த திமுக நிர்வாகத்தில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இதை போலவே மழைநீர் வடிகால்களும் சரிசெய்யப்படும்
தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து -வைகை அணையில் தற்போது 46 அடியும், பெரியாறு அணையில் 119 அடியும் தண்ணீர் உள்ளது.கோடைகாலமாக இருப்பதால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கும் லாரி மூலம் அதிக அளவில் தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் மேயர் திட்டங்களை பார்வையிட வந்தாலோ அல்லது மாநகராட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ மண்டல தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேயர் - நான் மண்டல தலைவர்களின் அதிகாரங்களில் தலையிடுவது இல்லை. மற்ற மண்டல தலைவர்கள் இது போன்று குறை கூறியதும் இல்லை. நீங்கள்(சாலைமுத்து) மட்டும்தான் கூறுகிறீர்கள். மாநகராட்சி திட்டம் மற்றும் பணிகளை பார்வையிட வந்திருப்போம். அதற்காக உங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வந்ததாக கூறுவது தவறு.
பெ.சாலைமுத்து - மதுரை மாட்டுத்தாவணி சம்பக்குளத்தில் சுடுகாடு முதலில் வந்ததா? இல்லை தயா சைபர் பார்க் முதலில் வந்ததா?
நகரமைப்பு அதிகாரி- சுடுகாடுதான் முதலில் வந்தது.
சாலைமுத்து- அப்படியென்றால் தயா சைபர் பார்க் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான 8 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. எந்த தனிநபரும் மாநகராட்சியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதை மாநகராட்சி இடித்து தள்ளி தன்வசம் ஆக்கி கொள்ளும். மு.க.அழகிரியின் சைபர் பார்க்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இன்னும் இடிக்காதது ஏன்? மாநகராட்சி இடத்தை மு.க.அழகிரி திட்டம் போட்டு அபகரித்துள்ளார். இது நில அபகரிப்பா இல்லையா?
ஆணையாளர்- இது நில அபகரிப்பு தான்.
மேயர் -நில அபகரிப்பு என்றால் மாநகராட்சி மூலம் போலீசில் மத்திய மந்திரி அழகிரி மீது புகார் செய்யப்படும் என்றார். இதை கேட்டதும் அதிமுக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
வடக்கு மண்டல தலைவர் ஜெயவேல்- வடக்கு மண்டலத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். கவுன்சிலர்கள் மக்ககளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள மாநகராட்சி சார்பில்செல்போன் தரவேண்டும்.
மேயர்- அனைத்து கவுன்சிலர்களுக்கும் செல்போன் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சிக்கு 250 கோடி நிதி முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று துவங்கியதும் மேயர் ராஜன்செல்லப்பா முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அதில் கூறியிருந்ததாவது, மதுரை மாநகராட்சி தோன்றிய காலம் தொட்டு மாநகராட்சி வரலாற்றிலேயே இது வரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி திட்டங்களுக்காக முதலமைச்சர் அம்மா மதுரை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது மக்களை குளிர வைத்துள்ளது. முதல்வர் அம்மாவிற்கு மாமன்றத்தின் சார்பிலும், மதுரை மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தொலைநோக்கு திட்டமான 2023ஐ கொண்டுவந்து தமிழக மக்கள் பல் வளமும் பெற்று பார் போற்றி வாழ்ந்திட வழி செய்துள்ளார். முதல்வர் அம்மாவிற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.