எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி ஏப் - 26 - போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்று ஆண்டிபட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் தா. பாண்டியன் பேசினார். தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட பொருளாளர் எஸ். கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெ. தங்கம் முன்னிலை வகித்தார். முாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சி.பி.ஐ. மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசியதாவது - ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம்பட்டியில் கடந்த 7,8 ஆண்டுகளாக ஏழை விவசாய கூலிகள் இலவச வீட்டுமனைபட்டா கேட்டு போராடி வருகிறார்கள். நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபிறகும் அதிகாரிகள் இழுத்தடிப்பது நியாயமல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கான வீட்டு மனைபட்டாவை பெற்றேதீரும். அதிகாரிகள் அந்த 100 விவசாய கூலிகளுக்கு பட்டா வழங்கியே தீரவேண்டும். விலகி நீன்றால் கண்துடைப்பு என்று கருதவேண்டிவரும். மேலும் அவர் இந்தியாவில் புழங்கும் பணம் கொங்சம் நஞ்சமல்ல தொழிற்சாலைகளில் 100 கோடி லாபம், வங்கிகளில் பலகோடி லாபம், நெய்வேலியில் லாபம், நிலக்கரி சுரங்கத்தில் லாபம், ரயில்வே துறையில் பலகோடி லாபம் என்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி பேரில் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் பலகோடிபேர் உள்ளனர். பட்டினி கிடப்போர் கோடிக்கணக்கில் உள்ளனர். இன்று கிரிக்கெட் விளையாடும் ஒருவருக்கு 3 கோடி முதல் 9 கோடி வரை சம்பளம் தருகிறார்கள். அதைபடம் பிடித்து காட்டும் சோனிகம்பெனிக்கு 2500 கோடி லாபம். ஆனால் கங்கை கரையிலும் கோதாவரிக்கரையிலும் கரும்பு, வாழை, நெல் பயிரிட்டு கஷ்டப்பட்டு நமக்கு உணவுதரும் விவசாயிக்கோ 2 கோடிகடன் என்று சொல்கிறார்கள். மக்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும். மக்கள் இருக்கிறவரை தான் கட்சிகள். கட்சிகள் மக்களை உயிரோடும், மானத்தோடும், நிம்மதியோடும் வாழ செய்யவேண்டும். சமீபத்தில் இந்திய அரசு விஞ்ஞான ரீதியாக கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகனை பறக்கவிட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். வளர்ந்து வரும் விஞ்ஞானம் மக்களுக்காக என்ன செய்தது. குடிசையை மாற்றி வீடுகட்டி கொடுத்ததா? தண்ணீர் கொடுத்ததா? படிப்பு கொடுத்ததா? மக்களுக்கு பயன்தராத விஞ்ஞான வளர்ச்சி தேவைதானா? என்று கேள்வி எழுப்பினார். நாட்டில் இன்னொரு மோசமான சூழல் தற்போது கலெக்டரையும், எம்.எல்.ஏவையும் கடத்துகிறார்கள். காப்பாற்ற வந்த இருவரையும் சுட்டு கொள்கிறார்கள். நடந்தது என்ன, ஆசிவாசிகளுக்கு என்ன தெரியும் அவர்கள் குறைதீர்க்கப்பட்டதா? போஸ்கோவின் விருந்துக்கு செல்கிறவர்கள் சிந்திக்கவேண்டாமா? நல்ல காரியம் செய்யப்போய் கெட்டபெயரை உண்டாக்கிவிடுகிறது. தமிழ்நாட்டோடு பீகாரை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். தமிழ்நாடு மின்வெட்டுக்குபிறகும் ஜொலிக்கிறது. பீகாரிலோ பசிபஞ்சம், பட்டினி, இன்னும் சைக்கிள்ரிக்சாவும், எண்ணெய் தேய்க்காததலையும், சோளாமாவும், மிளகாயும் தின்று உயிர் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 10 கோடி. பீகாரின் வருமானம் வெறும் 600 கோடி பீகாரில் தான் கங்கை ஓடுகிறது. மாநிலங்களுக்கிடையே வித்தியாசம் 6 மாநிலங்கள் நன்றாக உள்ளது. 24 மாநிலங்கள் தரித்திரத்தில் உள்ளது. 6 மாநிலங்களிலும் 6 மாவட்டங்கள் தான் நன்றாக உள்ளது. நமது இந்தியர்களின் பணம் வெளிநாட்டில் 25 வங்கிகளில் 120 லட்சம் கோடி பதுக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடி வருமானம் வரும் தமிழ்நாட்டிலே மிக்ஸி இலவசம், படிப்பு இலவசம், கரண்ட் இலவசம் எல்லாமே இலவசம் எனத்தரும்போது 120 லட்சம் கோடி வெறுமனே வெளிநாடுகளில் கிடக்கிறது. அதை திரும்ப பெற்றால் என்ன என கேட்டால் சட்ட சிக்கல் என்கிறார்கள்.
மேலும் அவர் பேசியது கெட்ட பின்பு ஞானி என்பார்கள் கலைஞர் இப்போது சொல்கிறார் தனித்தமிழ் ்ழம் வேண்டும் என்று 10 வருடம் கழித்துசொல்ல கூடாது. இலங்கையில் எங்கள் ரத்தம் மடியக்கூடாது என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ராணுவத்தையும் அனுப்பி தளவாடங்களையும் அனுப்பி எங்கள் சொந்தங்களை கொன்று குவித்தபின் இன்று துாதுக்குழு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? முள்வேலியில் முடங்கிகிடக்கும் ்ழத்தமிழர்கள் முதலில் வெளியேற்றி குடியமர்த்து அதற்குப்பின் வருகிறோம் என்றல்லவா? இந்த காங்கிரஸ் சொல்லியிருக்கவேண்டும். கேபினட் அந்தஸ்தில் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் திமுகவிற்கு இது தெரியவில்லை. இன்று வீடு கட்டி கொடுக்கிறார்களாம். ஏற்கனவே இருந்த தமிழர்களின் வீடுகள் எங்கே? போர்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம். தமிழக அரசுக்கு வேண்டுகோள் பள்ளி, கல்லுாரிகள் தொடங்கும் நேரம் பள்ளி, கல்லுாரிகளுக்கான முறையான விதிமுறைகளின்படி அனுமதி வழங்கவேண்டும். முறையான கட்டண விபரங்களை டி.வி.யில் அறிவிப்பு செய்யவேண்டும். நிலத்திருடர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். மின்சாரத்தட்டுப்பாட்டை நீக்க இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பேசினார். முன்னதாக நடந்த மாவட்டகுழு கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.வி.கே. ஜீவா, மாவட்டதுணைச்செயலாளர் ரவிமுருகன், ஒன்றிய செயலாளர் பெருசு, ஒன்றிய துணைச்செயலாளர் ஞானம்மாள், வக்கீல் பாண்டியன், நிர்வாகிகள் மாரியம்மாள், தமிழ்செல்வன், சீனிமுத்து, ராமசாமி, சரவணன், மாரிமுத்து, சாலமன், பாலு, பிரவீந்திரன், அண்ணாமலை, எரோமியா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட