எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இதே உற்சாகத்தோடு எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பணியாற்றி அ.தி.மு.க. ஆயிரங்காலத்துப் பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என்ற
ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியிலும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் தமிழக மக்களின் பேரன்பை பெற்ற சின்னம் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா அரும்பாடுபட்டு அமைத்து தந்த அ.தி.மு.க. அரசு. ஜெயலலிதாவின் பாதையில் மக்கள் பணியாற்றுவதை பாராட்டும் விதமாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 1,13,766 வாக்குகளைப் பெற்று, 44,924 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 95,377 வாக்குகளைப் பெற்று, 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றியை மிகுந்த நன்றியுணர்ச்சியோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறோம். இடைத் தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளப் பெருமக்களுக்கு எங்களுடைய இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு தொகுதிகளின் வாக்காளர்கள் மட்டுமின்றி, தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைவரது அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து பெறும் வகையில் அ.தி.மு.க. அரசு மக்கள் பணியாற்றும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரமாகும். கொள்கைகளில் சற்றும் சமரசம் இன்றி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழ்நாட்டு மக்களின் வளமான வாழ்க்கைக்கும், அமைதியான சமூக சூழலை உறுதி செய்யவும், இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டவும், எங்களால் இயன்றது அனைத்தையும் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.
இந்த இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளின் வாக்காளர்கள் அ.தி.மு.க. அரசுக்கு வழங்கி இருக்கும் நற்சான்றிதழ் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்புடன் பணியாற்றத் தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது. வாக்காளப் பெருமக்களே, உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படுவோம். அதுவே, ஜெயலலிதாவுக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக் கடனாகும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்த இடைத் தேர்தலில் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வின் கட்டளைகளை ஏற்று தங்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் பணிகளையும் அயராது செய்து முடிக்கும் அமைச்சர்களுக்கும் , தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களுக்கும் , முன்னாள் அமைச்சர்களுக்கும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நாங்கள் எப்படி நன்றி சொல்லப் போகிறோம்? இது நமது வெற்றி. எம்.ஜி.ஆரின் வெற்றி. ஜெயலலிதாவின் வெற்றி. இதே உற்சாகத்தோடு எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பணியாற்றி அ.தி.மு.க. ஆயிரங்காலத்துப் பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம்.
இந்த இடைத் தேர்தலுக்கான பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்திட்ட, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், புரட்சி பாரதம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.