எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.24 - டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம் என்றும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், மக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 423 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, டெங்கு காய்ச்சலை உடனடியாக முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று (23.5.2012) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் காய்ச்சலுக்கு காரணமான வைரஸை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகக் குழுவினர், டெங்கு வைரஸ் வகை1 மற்றும் டெங்கு வைரஸ் வகை3 ஆகியவற்றால் இந்த காய்ச்சல் திடீரென ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர். இதன் அடிப்படையில், எனது உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனது உத்தரவின் பேரில், 17.5.2012 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் திருநெல்வேலி சென்று இது குறித்து கடையநல்லூர், தென்காசி நகராட்சிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். இந்தக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அமைச்சர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 18.5.2012லிருந்து ஒரு வட்டாரத்திற்கு இரண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம்கள் வீதம், 38 விழிப்புணர்வு முகாம்கள் நாள்தோறும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன என்று ஆய்வு செய்தார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கூடுதலாக இரண்டு குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒரு வட்டாரத்திற்கு ஒரு nullச்சியியல் வல்லுநரும், மூன்று வட்டாரங்களுக்கு ஒரு மூத்த nullச்சியியல் வல்லுநரும் நியமிக்கப்பட்டு கொசு தடுப்புப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைமை nullச்சியியல் வல்லுநர் தலைமையில், 25 nullச்சியியல் வல்லுநர்கள் இதற்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ அலுவலரும், ஒரு நகராட்சிக்கு ஒரு மருத்துவ அலுவலரும் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரத்திலும், நோய் கண்டறியும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு துணை இயக்குநர்கள் மற்றும் மூன்று சுகாதார அலுவலர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கென கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்புப் பணிகளுக்கென்று 29 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதையும், அதனைக் கட்டுப்படுத்துவதையும், நோய் தாக்கியவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ வசதிகள் அளிப்பதையும் கண்காணிப்பதற்காக எனது உத்தரவின் பேரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர், மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு, தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து இரண்டு நிபுணர்கள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டு அங்குள்ள மருத்துவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 16.5.2012லிருந்து ஒரு வட்டாரத்திற்கு 70 தற்காலிக பணியாளர்கள் வீதம் தினக்கூலி அடிப்படையில், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 1,330 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் கொசுப் புழு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் காரணமாக டெங்கு காய்ச்சல் அண்டை மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,466 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 817 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 423 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று (23.5.2012) எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகை மருந்து அடிக்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்.
பொதுமக்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 50 வண்டிகள் மூலம் தெரு முனைப் பிரச்சாரமும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரங்களும் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவக்குழு மூலமாக காலையிலும், மாலையிலும் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக தனி வார்டுகள் அமைக்கப்படும். இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் அனுப்பப்படுவர்.
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் கடையநல்லூர் போன்ற டெங்கு காய்ச்சல் உள்ள இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான தேவையை குறைக்கும் வகையில் தினந்தோறும் குடிநீnullர் வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவர்.
மற்ற மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாகக் கண்காணிக்கவும், டெங்கு காய்ச்சல் ஏற்படாத வண்ணம் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையையும் தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட மருத்துவ அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடர் அல்லது சாம்பல் கொண்டு நன்கு கழுவ வேண்டும் என்றும், எந்தக் காய்ச்சல் ஏற்பட்டாலும், உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவ முகாமிற்கோ சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல