முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840-க்கும் விற்பனையானது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதட்டம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. ஆனால் போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 13-ம் தேதி தங்கம் மீண்டும் சவரனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டி ரூ.31,112-க்கு விற்பனையானது.தொடர்ந்து விலை உயர்ந்த நிலையில் 17-ம் தேதி சற்று குறைந்து ரூ.31,216 ஆனது. மறுநாளே விலை மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.31 ஆயிரத்து 408-ஆக உயர்ந்தது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ31,840-க்கும் விற்பனையானது. தங்கம் விலை பவுன் ரூ.32 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், வெள்ளியின் விலையும் நேற்று கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.52 ஆயிரத்து 100-ஆக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 52.10-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து