எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ள அகண்ட காவிரியில் 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேலணை கட்டப்பட்டது. இதில் காவிரி ஆற்றில் 41 கண் மதகு கொண்ட மேலணையும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரி நீரை திறந்து விடும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 45 கண் மதகுகள் கொண்ட மேலணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் தெற்கு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. 630 மீட்டர் நீளமுள்ள மொத்த அணையில் 110 மீட்டர் அளவுக்கு சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. முக்கொம்பு மேலணை உடைந்த மறுநாளே அங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அணை ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி முக்கொம்பில் புதிய அணை கட்டும் பணி கடந்த 6-3-2019 அன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முக்கொம்பு அணை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி வந்த அவர் முக்கொம்பு அணைக்கு சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை என்ஜினீயர்களிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளத்தால் இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு மாற்றாக புதிதாக ரூ. 387.60 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை 31-1-2021க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 484 பைல்களில் 287 பைல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1650மீட்டர் நீளமுள்ள அடித்தளசுவரில் 711 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவர் முடிக்கப்பட்டுள்ளன. 1532 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுச்சுவரில் 500 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுசுவர் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 7800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் (சி சி பிளாக்ஸ்) 1489 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 55 எண்ணிக்கையிலான மதகு கதவுகளில் 45 மதகு கதவுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- கர்நாடகாவில் மேகதாதுவின் குறுக்கே மீண்டும் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்து விட்டது. காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பினை கூறிவிட்டது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
கேள்வி:- காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களை சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்களே?
பதில்:- விவசாயிகள் தரப்பில் இருந்து எனக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு இருக்கும் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம்.
கேள்வி:- அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்களை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:- தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.
தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவியா?
கேள்வி:- தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தங்கள் கட்சிக்கு மேல்சபை எம்.பி. வேண்டும் என்று கேட்டுள்ளாரே?
பதில்:- கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் கட்சியில் மூத்த தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி தலைமை கூடி இதுபற்றி முடிவு எடுக்கும்.
கேள்வி:- பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி.க்கு) எதிராக தீர்மானம் போட்டுள்ளனரே? அது போல் தமிழகத்திலும் வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- அவையெல்லாம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.