எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாளை (31-ம் தேதி) ஊரடங்கு முடியவுள்ள நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
கொரோனா தொற்றை தடுக்க 6 முறை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். இந்தியா முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், சென்னையில் மக்கள் தொகை அதிகம். குறுகலான தெருக்கள். ஒரே வீட்டில் பலர் வசிக்கிறார்கள். வைரசை கட்டுப்படுத்த அம்மாவின் அரசு எடுத்த முயற்சியால் பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடு, வளர்ந்த நாடுகளில் உயிரிழப்பு அதிகம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்ததன் விளைவாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி தொடர்ந்து பணிபுரிய விரும்பினால் ஆட்சியர்கள் உதவி செய்ய வேண்டும். தொழிற்சாலைகள், அரசு வழிகாட்டுதல் படி நடைபெறுகிறதா என ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முறையாக ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா தொடர்புடையவர்களை கண்டறிந்து ஆட்சியர்கள் சிகிச்சை தர வேண்டும். சென்னை மாவட்டத்துக்குள் வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும். தளர்வு அறிவிக்கும் முன் ஆட்சியர்கள் தலைமைச் செயலரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேரடியாக பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது மக்களின் கடமை. அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இதனை தடுக்க முடியும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.
கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நமது மருத்துவர்கள் சிறப்பான முறையில் உரிய சிகிச்சையை நல்ல முறையில் அளித்து வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி வருகின்றனர். மருத்துவ நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி அரசு செயல்படுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நோய் பரவுவதற்கு முன்பே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினோம்.
கொரோனா பரிசோதனை மையங்கள் 42 அரசு மருத்துவமனைகளிலும், தனியாரிடம் 28 மையங்களும் என மொத்தம் 70 பரிசோதனை மையங்கள் உள்ளன. போதுமான அளவு முகக் கவசம், வெண்டிலேட்டர், பாதுகாப்பு உடைகள் உள்ளன. அரசை பொறுத்தவரை வேகமாக, துரிதமாக செயல்படுகிறோம். தினசரி சுமார் 12 ஆயிரம் பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்கிறது. காய்கறி விலை உயரவில்லை. வேளாண் பணிகள் தடையின்றி நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு தேடி பொருட்கள் கொண்டு சென்று கொடுக்கப்படுகிறது.
பல்வேறு துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அதிகமான அளவில் பரிசோதனை நடப்பதால் தான் அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடிக்க முடிகிறது. அவர்களுக்கு சிகிச்சை தரப்படுகிறது.
நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு தவறிவிட்டது என சிலர் கூறுகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் சிறப்பாக பணியாற்றிய தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் துறை அதிகாரிகள், போலீசார், மாவட்ட கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், பல்வேறு துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.