முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் : வரும் 14-ம் தேதி கூடுகிறது

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும் 14-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் 6  கட்டங்களாக கடந்த ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. மேலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து வரும் 14-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் விவாதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், செமஸ்டர் தேர்வுகள் நடத்து தொடர்பாகவும், குடும்ப அட்டைகளுக்கு மேலும் 1,000 வழங்குவது குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், கொரோனா அதிகளவில் பரவும் நேரத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுவது முக்கியமாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து