எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.8 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப்பணிகளை தணிக்கை செய்ய தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் உருவாக்கவும், அதில் 858 பதவிகளை நியமிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நம் நாட்டின் உயிர்நாடியாக விளங்குவது கிராமங்கள் என்பதாலும், நாட்டின் முன்னேற்றம், கிராமங்களின் முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது என்பதாலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதாகும். வறுமையை உருவாக்கும் காரணிகளான வறட்சி, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு போன்றவற்றைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளுவதன் மூலம், இயற்கை ஆதாரங்களின் மேம்பாட்டினை உறுதி செய்து, நிலையான வளர்ச்சியினை மேம்படுத்துவது இத்திட்டத்தின் துணைக் குறிக்கோளாகும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், காடு வளர்ப்பு மற்றும் மரம் நடுதல், குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரல் போன்ற பல்வேறு கிராம நலப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 119/ரூபாய் ஊதியத்தை 132/ரூபாயாக உயர்த்தி வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் பணிகள், ஊராட்சிகள் மூலம் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை தணிக்கை செய்யும் நோக்கில், தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த தணிக்கை சங்கத்தில் பணியாற்றுவதற்காக இயக்குநர் 1, இணை இயக்குநர் 2, உதவி இயக்குநர் 1, சமூக தணிக்கை நிபுணர் 1, மாநிலக் குழுக் கண்காணிப்பாளர் 4, உதவி பணியாளர்கள் 4, மாவட்ட அளவில், மாவட்ட வள ஆதார அலுவலர் 44, மாவட்ட உதவி பணியாளர் 31, வட்டார வள ஆதார அலுவலர் 770 என 858 பணியிடங்களை உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் கல்வியறிவு பெற்ற தொழிலாளர்கள், ஒரு ஊராட்சிக்கு 5 நபர் வீதம் 62,620 பேரை வருடத்தில் 5 நாட்களில் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பணியாற்றும் ஊராட்சி உதவியாளர் என்ற பணியிடத்தின் பெயரை ஊராட்சி செயலாளர் என பெயர் மாற்றம் செய்து, அவர்களின் பணியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலமுறை ஊதியம் 2500ற5000 மற்றும் தர ஊதியம் 500 ரூபாயுடன் சிறப்பு படியாக மாதம் 500 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.
தற்போது, கிராம ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணிகளை மேன்மையாக செய்யும் பொருட்டு, பணி நிமித்தமாக அவர்கள் பணிபுரியும் கிராம ஊராட்சிகளிலிருந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (தணிக்கை) மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வர வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டும், அதற்காக அவர்களுக்குப் பயணப்படி எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், ஊராட்சி செயலர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியாக 300 ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சி செயலாளர்கள் பயன் அடைவார்கள்.
இதேபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கும் வகையில் மின்மோட்டாரை இயக்கி மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரைச் சேமித்து, பின்னர் கிராம குடியிருப்புகளுக்கு பகிர்ந்தளிக்கும் மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரின் பணியின் தன்மையை கருத்தில் கொண்டு அவர்கள் பயன் அடையும் வகையில், முதன் முறையாக அவர்களுக்கு சிறப்புப் படியாக மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்