முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கடந்த 1-ம் தேதி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி பதிவானது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் 2-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பரவல் குறைந்து வருகிறது.  2-ம் தேதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

3-ம் தேதி இது 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 ஆக பதிவானது. நேற்று முன்தினம்  (4-ம் தேதி) இது, 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 ஆக பதிவானது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், நேற்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து  3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,780- பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்து 148- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து