எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.12 - ஊழலில் ``கின்னஸ்'' சாதனை செய்த கருணாநிதி மற்றும் அவரது கும்பத்தாரை தமிழ்நாட்டைவிட்டே விரட்டியடிக்க, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க.வை டெபாசிட் இழக்கவைத்து ``கின்னஸ்'' சாதனை புரிய வேண்டும் என்று சென்னையில் நடந்த இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஜெயலலிதா பொது மக்களுக்கு நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை பகல் 12.00 மணிக்கு சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையலிருந்து துவக்கி, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுயில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் தமிமூன் அன்சாரிக்கு இரட்டை மெழுவர்த்தி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் பெசன்ட் சாலை, காமராஜர் சாலை, போர் நினைவு சின்னம், ராஜாஜி சாலை, இப்ராகிம் சாலை, ராயபுரம் பாலம், எம்.எஸ்.கோயில் தெரு வழியாக, கல்மண்டபம் காவல் நிலையம் அருகே ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி பிரச்சாரம் செய்தார்.
பின்னர் எஸ்.என்.செட்டி தெரு, கடல்கரை சாலை, டோல்கேட், அப்பர்சாமி கோயில் தெரு, டி.எச்.ரோடு வழியாக தேரடி சந்திப்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திருவெற்றியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரச்சாரம் செய்து, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் டோல்கேட், டி.எச்.சாலை, தண்டையார்பேட்டை காவல் நிலையம், வைத்தியநாதன் தெரு, வைத்தியநாதன் பாலன், மணலி சாலை சந்திப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேலுக்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிறகு பிரச்சாரத்தை முடித்து கொண்டு எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, திரு.வி.க. லிங்க்ரோடு, முள்ளைநகர் பாலம், சத்திய மூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக சென்று எம்.கே.பி. நகர், 4-வது குறுக்கு தெரு சந்திப்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் அ.செளந்தரராஜனை ஆதரித்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் எம்.கே.பி. நகர் 3-வது குறுக்கு தெரு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, எரிக்குசேரி நெடுஞ்சாலை, பேசின்பாலம் வழியாக பேசின் ரோடு, காட்பாடா ரோடு, தங்கசாலை மணிகூண்டு, பழைய ஜெயல் ரோடு வழியாக வந்து, சாலை விநாயகர் கோயில் தெரு, பிரகாசன் சாலை சந்திப்பில் துறைமுக தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பழகருப்பையாவை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரம் முடிந்தவுடன் டாக்டர் முத்துசாமி சாலை, டாக்டர் முத்துசாமி மேம்பாலம், கொடிமர இல்லம் சாலை, போர் நினைவு சின்னம், ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, நொச்சுகுப்பம் சாலை வழியாக டுமீங்குப்பம், சீனிவாசபுரத்தில் மைலாப்பூர் வேட்பாளர் ராஜலட்சுமியை ஆதரித்து, இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்.
இந்த பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா பேசியதாவது:-
ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ் நாட்டை மீட்டெடுக்க நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு தான் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் என்பதை உங்களுக்கெல்லாம் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கருணாநிதி குடும்பத்தினரும், திமுகவைச் சேர்ந்த ஒரு சில தலைவர்களின் குடும்பத்தினரும், தமிழ் நாட்டை சூறையாடி உலகப் பெரும் பணக்காரர்களாக மாறி இருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பது தான் உலகம் உங்கள் முன் வைக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு; எந்தப் பொருளையும் யாரும் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கும் விலைவாசி; ஊருக்கு ஊர் ரவுடி சாம்ராஜ்ஜியம்; மணல் கொள்ளை; அரிசி கடத்தல்; எதைத் தொட்டாலும் ஊழல்; சமூகத்தில் யாருமே சுதந்திரமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்ற அக்கிரமம்; அடிதடி; கட்டப் பஞ்சாயத்து; கள்ளச் சாராயம் என்று என்னென்ன சமூக தீமைகள் உண்டோ அவை அனைத்தும் தலைவிரித்து ஆடும் சூழ்நிலை இன்றைக்கு தமிழ் நாட்டில் நிலவுகிறது.
இந்தத் தேர்தல் மூலம் தமிழ் நாட்டை மீட்டெடுக்கவில்லை என்றால் வேறு எப்பொழுது கருணாநிதியின் குடும்பத்திடமிருந்து தமிழ் நாட்டை மீட்கப் போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மையெல்லாம் பார்த்துக் கேட்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தேச சொத்தை கொள்ளையடித்த கருணாநிதி கும்பலுக்கு தமிழ் நாடு என்ன தண்டனை கொடுக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த நாடே காத்திருக்கிறது. தேச விரோத சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு, கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை தமிழக வாக்காளர்கள் வேறோடும், வேறடி மண்ணோடும் வீழ்த்தினார்கள் என்ற வரலாற்றுச் சாதனையை கின்னஸ் சாதனையை செய்து முடிக்க உங்கள் முன் வருவது தான் இந்தத் தேர்தல்.
பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு, கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டதை நீnullங்கள் அறிவீர்கள்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழ் நாட்டின் கடன் என்பது தான் கருணாநிதி நடத்திய கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் தலையாய சாதனை. தானும், தன் குடும்பமும் மக்கள் பணத்தில் வளம் பெற, எப்படியெல்லாம் திட்டம் தீட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் திட்டம் தீட்டி பல வழிகளில் மக்களுக்கு நன்மை செய்வதைப் போல மக்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்கும் ஒரு பேராசைக்கார கும்பல் தமிழ் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது. இலவச கலர் டிவி என்று அரசு பணத்தைக் கொண்டு மக்களுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள டிவியை கொடுத்துவிட்டு; ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்டுக்கு 1,000 ரூபாய் கேபிள் கட்டணம் வசூலிக்கும் ஒரு திட்டம் போதும் கருணாநிதி குடும்பத்தின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நமக்கு விளக்கிச் சொல்ல.
வாக்காளப் பெருமக்களே, சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நம் முன்னோர்கள் போராடியதைப் போல, இந்த தேர்தல் களத்தில் கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளைக்கார கூட்டத்தை எதிர்த்து மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியது நம் ஒவ்வொருவர் முன்னும் இருக்கும் கடமை என்பதை உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன். சில ஆண்டுகள் மத்தியில் அமைச்சராக இருந்து,
தலைமுறை தலைமுறையாக பாடுபட்டு தொழில் நடத்துபவர்களெல்லாம் பொருளாதார ஏற்ற இறக்கங்களில் அல்லல்படும் போது, கருணாநிதியும் அவரது குடும்பத்தினர் மட்டும் ஒரு தலைமுறை காலத்திற்குள் குபேரர்களாக மாறி இருப்பதன் மர்மம் என்ன? இந்த கொள்ளைகளுக்கெல்லாம் மக்களை சுரண்டும் இந்த கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க உங்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்தத் தேர்தல்.
வாக்காளப் பெருமக்களே, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு ஊழலில் சாதனை செய்திருக்கிறது கருணாநிதி குடும்பம். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு திமுக கூட்டணி போட்டியிட்ட இடங்களில் எல்லாம் டெபாசிட் இழந்தது என்ற புதிய சாதனையை தமிழக வாக்காளர்களாகிய நீnullங்கள் செய்து முடிக்க வேண்டும். செய்வீர்களா? நீnullங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கோஷம்) அப்போது தான் உங்களை சுரண்டிய ஒரு மனிதருக்கு nullநீங்கள் சரியான தண்டனை கொடுத்தீர்கள் என்று உலகம் உங்களை பாராட்டும். இப்படிப்பட்ட சுயநலவாத கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சாதனைகளை செய்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதனை செய்தார் கருணாநிதி?
தன்னுடைய மகனை துணை முதலமைச்சர் ஆக்கினார். மற்றொரு மகனை மத்திய அமைச்சராக ஆக்கினார். பேரனை மத்திய அமைச்சர் ஆக்கினார். மகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார். இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டுகால சாதனை.
ஊழல் செய்வதில் கருணாநிதிக்கு நிகர் யாருமில்லை. 35 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் வல்லவர் என்று nullநீதிபதி சர்க்காரியாவிடமிருந்து சான்றிதழ் பெற்றவர் கருணாநிதி. இதுவரை வேறு எந்த முதலமைச்சரும் இப்படிப்பட்ட ஒரு சான்றிதழை பெற்றதில்லை. தமிழக மக்களுக்காக எந்த தியாகத்தையும் கருணாநிதி செய்யவில்லை. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க நினைக்கிறார் கருணாநிதி.
வாக்காளப் பெருமக்களே, ஏமாந்து விடாதீர்கள்! ஒரு குடும்பம் மட்டும் வளம் பெற, ஏழு கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா? சிந்தித்து மனசாட்சிப்படி செயல்படுங்கள். ஏழு கோடி மக்கள் வளர்ச்சி பெற; தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கிட; தமிழர்கள் தலை நிமிர்ந்து நின்றிட; பண நாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை விலை பேச நினைக்கும் கயவர் கூட்டத்தை ஒழித்திட; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாக்காளப் பெருமக்களே, கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால், தமிழக மக்களாகிய உங்களை எல்லாம் விரட்டிவிட்டு, தமிழகத்தையே தன் குடும்ப வசம் ஆக்கிக் கொண்டுவிடுவார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீnullங்கள் விரட்டியடிக்க வேண்டும். செய்வீர்களா? nullநீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
ஜனநாயக நாட்டில் அதற்கான ஒரே வழி தேர்தல் தான். இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கருணாநிதியை குடும்பத்தோடு நீnullங்கள் அப்புறப்படுத்த வேண்டும். நான் முதலமைச்சராக இருந்த போது இலவச சைக்கிள், இலவச பாடப் புத்தகம், உழவர் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மழைnullநீர் சேகரிப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மின்வெட்டு என்ற பிரச்சினையே இல்லாமல் இருந்தது. தொழில் வளர்ச்சி பெருகியது. விவசாய உற்பத்தி அதிகரித்தது. சட்டம்ஒழுங்கு சீராக இருந்தது.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உங்கள் பணத்திலிருந்து ஒரு சிலவற்றை உங்களுக்கு கொடுத்து, தன் குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ளக்கூடிய திட்டங்களை மட்டுமே கருணாநிதியால் செயல்படுத்த முடியும். வளர்ச்சித் திட்டங்களை கருணாநிதியால் செயல்படுத்தவே முடியாது. அதை என்னால் நிச்சயம் செயல்படுத்த முடியும். ஏற்கெனவே செயல்படுத்தி காட்டி இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்காளப் பெருமக்களே, கருணாநிதியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் கடத்தல் பதுக்கல் தொழில்கள் மூலம் அவருடைய குடும்பத்திற்கு வருமானம் வருகிறது. ஐந்தாண்டுகளாக கருணாநிதியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னால் நிச்சயம் முடியும். இதை ஏற்கெனவே எனது ஆட்சிக் காலத்தில் நிரூபித்துக் காட்டி இருக்கிறேன்.
கருணாநிதியால் மின்வெட்டைப் போக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டைத் தான் அதிகப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி. ஆனால், என்னால் மின்வெட்டைப் போக்க முடியும். எனது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக ஆக்கிக் காட்டி இருக்கிறேன். கருணாநிதியால் சட்டம்ஒழுங்கை பேணிக் காக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டம்ஒழுங்கை நிலைநாட்டாத கருணாநிதி இனிமேலா நிலை நாட்டப் போகிறார்? ஆனால், என்னால் நிச்சயம் சட்டம்ஒழுங்கை பாதுகாக்க முடியும். கருணாநிதியால் கேபிள் டி.வி. தொழிலை அரசுடைமையாக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. தமிழ்நாட்டில் இந்தத் தொழிலை நடத்துகின்ற ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். ஆனால், என்னால் கேபிள் டி.வி. தொழிலை அரசுடமையாக்க முடியும். நிச்சயம் இந்த முறை அதை நடத்திக் காட்டுவேன். கருணாநிதியால் திரைப்படத் துறையை சுதந்திரமாக செயல்பட வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்தத் தொழிலே கருணாநிதியின் குடும்பத் தொழிலாகிவிட்டது. ஆனால், என்னால் முடியும்.
குடிநீர் பிரிச்சனைக்கு புதிய வீராணம் திட்டம் கொண்டு வந்தேன். கடல் நீரை குடிநீராக்கும திட்டம் கொண்டுவந்து குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கையை மேற்கொண்டேன். தமிழகத்தில் எல்லா வகையிலும் கொள்ளை அடித்த கருணாநிதி குடும்பம், கல்வித்துறையையும் விட்டுவைக்கவில்லை. தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிராக கருணாநிதி குடும்பத்தினர் என்ன செய்தனர்?
கருணாநிதியும் தான் தோற்பது உறுதி என்று தெரிந்ததால், வாக்காளர்களை மனமாற்றம் அடையச்செய்ய, பணத்தை வாரி இறைக்கிறார். 3 நாளில் பண மழை கொட்டுகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள் என்று திட்டமிடுகிறார்கள். தேர்தல் முடிவுகள் கருணாநிதியின் ஊழல் பணத்தால் மாறாது. நமது வெற்றியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. யாரும் சோர்வடைய வேண்டாம்.
புதிய வீசாரணம் திட்டத்தின் மூலம் சென்னைக்கு குடிநீர் கிடைக்கிறது, உங்களது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். மீனவர்களுக்கு இயந்திர படகுகளை வாங்க மானியம் வழங்கப்படும். 4 மாத இடைக்காலத்தில் மீன்பிடிக்க செல்லாதபோது, உதவி தொகையாக ரூ.4 ஆயிரம் உதவி தொகையாக வழங்கப்படும், மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடப்பது ரவுடி கும்பலின் ஆட்சி, இதற்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என்று வாக்காளர்களை ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
சுட்டெறிக்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் 46 கிலோ மீட்டர் சுற்றிவந்து, அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளருக்காக தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை ஜெயலலிதா செய்து முடித்தார். இந்த பிரச்சாரத்தின்போது பல்லாயிரம் கணக்கான மக்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று, சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.