முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாய்ச்சலுக்கு தயாரான கொம்பு வச்ச சிங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சுந்தரபாண்டியன் வெற்றியைக் கொடுத்த கூட்டணி “கொம்பு வச்ச சிங்கம்டா” படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின்  டிரெய்லர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவரது முதல் படமான சுந்தரபாண்டியனில் வரும்  ‘குத்துனது நண்பனா இருந்தா… செத்தா கூட சொல்லக்கூடாது’ என்னும் வசனம் பெரும் பிரபலமாகியது.

அதே போல் “கொம்பு வச்ச சிங்கம்டா”  டிரெய்லரில் வரும் இங்க எல்லாரும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. , இனி இவனுங்களோடதான் நம்ம வாழ்ந்தாகனும்’, எனும் வசனம் பட்டி தொட்டிகளிலெல்லாம்  பிரபலமடைந்து வருகிறது.

மீண்டும் இருவரும் இணைந்திருப்பதால், சுந்தரபாண்டியன் படம் போல் இப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்தும் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து