எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசுக்கு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தொழிற்சாலை மின் நுகர்வு அதிகரிப்பு, தொடர் மழையால் நிலக்கரி சுரங்கம் மூடல், இறக்குமதி நிலக்கரி விலை அதிகரிப்பு, இருப்பு வைப்பதில் குளறுபடி போன்ற காரணங்களால் பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது,
மாநில முதல்வர்கள் கோரிக்கை
இதையடுத்து நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசுக்கு பல மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை கடுமையாக இருப்பதால் நாட்டின் பல மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் போன்ற ஆறு மாநிலங்களில் மின்விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தலையீடு செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், மின் நெருக்கடியைச் சமாளிக்க மாநிலங்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி நிலக்கரி விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் மத்தியஅரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், ‘தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை இருந்து வருகிறது. நிலக்கரி விநியோகம் தடைபட்டுள்ளதால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உடனடியாக நீங்கள் இது விஷயத்தில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்கள் தவித்து வரும் நிலையில் ஒரு சில நாட்களில் உத்தரபிரதேசத்தில் மின் விநியோக நெருக்கடி மோசமாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஆனால், நிலக்கரி சப்ளை விரைவில் சீராக்கப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். பீகார் எதிர்கட்சி தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிக்கையில் பீகார் மாநிலத்தில் மின் விநியோக பாதிப்பு ஏற்படவுள்ளது. ஏற்கனவே மின் கட்டணம் அதிகமாக இருந்தபோதிலும், மாநில அரசின் நிர்வாக தோல்வியால் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் நிலக்கரி இருப்பு பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. அனல் மின் நிலையங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு 20 நிலக்கரி ரேக்குகளை கூடுதலாக அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ராஜஸ்தானில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், வரும் ஓரிரு நாளில் அனல் மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு பெங்களூரு திரும்பினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து, கர்நாடகத்திற்கு எந்த விதமான பற்றாக்குறையும் இன்றி நிலக்கரி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றார்.
நான்கு காரணங்கள்
இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறைக்கான நான்கு காரணங்களை மத்திய மின்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில், நாட்டில் நிலக்கரி இருப்பு குறைந்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகம் தலைமையிலான துணைக் குழு வாரத்திற்கு இரண்டு முறை, நிலக்கரி இருப்பு நிலைமையை கண்காணித்து வருகிறது.
கொரோனா ஊரடங்குகிற்கு பின்னர் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்து வருவதால் மின்சாரம் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் முதல் நிலக்கரி சுரங்க பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நிலக்கரி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரிப்பால் இறக்குமதி நிலக்கரி சார்ந்த மின் உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போதுமான அளவு நிலக்கரி இருப்புகளை வைத்திருக்காததால், தற்போது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தினசரி மின்சார நுகர்வு ஒரு நாளைக்கு 4 பில்லியன் யூனிட்களைத் தாண்டியுள்ளது. 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மின் தேவையை நிலக்கரி மூலமே கிடைக்கிறது. அதனால், நிலக்கரியை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் காலத்திற்கான மின் நுகர்வு 106.6 பில்லியன் யூனிட்டாகவும், அதே தற்போதைய காலகட்டத்தில் 124.2 பில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதால், அதனை முறைப்படுத்துவதற்காக நிர்வாகக் குழு ஒன்றை மத்திய மின்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அதன் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தினசரி நிலக்கரி இருப்புகளை கண்காணித்தல், மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்துதல், இந்திய ரயில்வேயுடன் இணைந்து சப்ளையை உறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிலக்கரி இந்தியா லிமிடெட் (சி.ஐ.எல்.) மூலம் வரும் நாட்களில் நாளொன்றுக்கு 1.6 எம்.டி. அளவிற்கு நிலக்கரி சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.