எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் இருந்து தெற்கே அமைந்துள்ள யாஃப் எனும் நகரில் பைசன்டைன் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இயங்கிவந்த இந்த வளாகத்தில், சாறு பிழிவதற்கான ஐந்து கட்டுமானங்கள் மண்ணுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மிக நுட்பமான தயாரிப்பு பணிகள் முடிந்த பின்பு, இந்த வைன் மத்திய தரைக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
___________________
ஈராக்கில் பார்லி. தேர்தல்: அல் ஸதர் கட்சி வெற்றி..!
ஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதகுரு மொக்டடா அல் ஸதர்-ன் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2018-ல் 54 தொகுதிகளில் வென்ற அல்-ஸதர்-ன் கட்சி இந்த தேர்தலில் தலைநகர் பாக்தாத் உட்பட 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டி.வி மூலம் மக்களுக்கு உரையாற்றிய மொடாட அல்-ஸ்தர் வெளிநாடுகளின் எந்தவித தலையீடுகளும் இன்றி தேசியவாத சித்தாந்த கொள்கை கொண்ட ஆட்சி நடைபெறும் என தெரிவித்தார்.
_______________
பிலிப்பின்ஸில் வெள்ளம்: 9 பேர் பலி - 11 பேர் மாயம்
பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த திடீர் மழைப்பொழிவால் வடக்கு பிலிப்பின்ஸானது கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. வெப்பமண்டல புயல் தென் சீனக் கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கே சுமார் 315 கிலோமீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழைவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெங்குவாட் பகுதியில் ஒரு காவலர் உள்பட 5 பேர் பலியாகினர். மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 4 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடும்வெள்ளம் காரணமாக 1600க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்கள் பிலிப்பின்ஸைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
_______________
ஜெஃப் பெசாஸை, பின்னுக்கு தள்ளிய ஸ்பேஸ்-எக்ஸ் ஓனர்
அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸின் சொத்து மதிப்பை விட தன் சொத்து மதிப்பு அதிகம் என்பதை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், சூசகமாக தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்-எக்ஸ்-ன் பங்கு மதிப்பு சென்ற வாரம் உச்சத்தை அடைந்த நிலையில், எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 222 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
அமேசான் தலைவர் ஜெஃப் பெஸாசின் சொத்து மதிப்பு 190.8 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில், 1999ஆம் ஆண்டில் ஒரு பத்திரிக்கையில் அமேசான் தோல்வியடையும் என கூறி வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி டிவிட்டரில் ஒரு பதிவிட்ட ஜெஃப் பெசாஸ், கணிப்புகளை உடைத்து உலகின் மிக வெற்றிகரமான நிறுவனமாக அமேசான் உருவெடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பதில் பதிவிட்ட எலான் மஸ்க், ஒரு வெள்ளி பதக்க எமோஜியை பதிவிட்டுள்ளார்.
______________
அமேசான் ஊழியர்களுக்கு புதிய விதிமுறை அறிவிப்பு
அமேசான் நிறுவனத்தின் அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வாரத்தில் எத்தனை நாள் அலுவலகம் வர வேண்டும் என்பதை அந்தந்த குழுவின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆண்டி ஜெஸி தெரிவித்துள்ளார். இதற்கு முன் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்று இருந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் முன்னதாக கொடுக்கப்படும் அறிவிப்பின் அடிப்படையில் குழுவின் ஆலோசனை கூட்டங்களில் நேரில் கலந்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது. ஆண்டில் 4 வாரங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்த படி வேலை செய்ய அமேசான் அனுமதித்துள்ளது.
____________
சீனாவில் மழை - வெள்ளம்: பொதுமக்கள் 15 பேர் பலி
சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கே ஷாங்சி மாகாணத்தில் கடந்த 2ந்தேதி முதல் 7ந்தேதி வரையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், மாகாணத்தின் 76 கவுன்டி பகுதிகள் பாதிக்கப்பட்டன. 17.6 லட்சம் பேர் மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரத்து 100 பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.
இந்த மழையால் 37 ஆயிரத்து 700 வீடுகள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. 2.38 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதனால், 78 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது. சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் தொடர்ச்சியான மழை பொழிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர் என மாகாண அரசு தெரிவித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட