முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பாக். தீவிரவாதி கைது

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

டெல்லியில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதியை சிறப்புப் பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து ஏகே. 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

 

டெல்லி லட்சுமி நகர் அருகே ரமேஷ் பார்க் பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதி தங்கியிருந்த தகவல் சிறப்புப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை சோதனை நடத்திய காவல்துறையினர், போலி இந்திய அடையாள அட்டையுடன் தங்கியிருந்த தீவிரவாதியை கைது செய்தனர். அவர், பாகிஸ்தானின் பஞ்சாபை சார்ந்த முகமது அஷ்ரஃப் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, 2 கை துப்பாக்கிகள், கையெறி குண்டு மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து