முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் தாக்குதல் நடத்தினால் 'துல்லிய தாக்குதல்' நடத்தப்படும் : பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கோவா : எல்லையில் அத்துமீறினால் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்றும், துல்லிய தாக்குதல் மூலம் உடனுக்குடன் பதிலடி தரப்படும் பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது. 

கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜனதா விருபும்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா முக்கிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கோவா மாநிலம் சென்றார்.

கோவாவில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, முன்பெல்லாம் எல்லையில் ஏதாவது தாக்குதல் நடத்தினால் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் பலன் தராத நிலையில் தற்போது எல்லையில் அத்துமீறினால் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என அவர் தெரிவித்தார்.

துல்லிய தாக்குதல் மூலம் உடனுக்குடன் பதிலடி தரப்படும் எனவும் எச்சரித்தார். எல்லையில் பிரச்சனை ஏற்படுத்த முயற்சித்தால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும், தீவிரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பாடம் கற்றுத்தரப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை சீண்டினால் நினைத்து பார்க்க முடியாத அளவில் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.

 

பிறகு, அமித் ஷா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு 3 நாள் பயணமாக நேற்று புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பல்வேறு வகையான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்கிறார்.  அங்குள்ள சிறைச்சாலைக்கு சென்று தியாகிகளின் நினைவிடத்திற்கு மாலை அணிவிக்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக  அவர் ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து