முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் - கோலியை கவுரவப்படுத்த பி.சி.சி.ஐ. முடிவு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 2 - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு பாராட்டும், விராட் கோலிக்கு விருதும் வழங்கி கவுரவப்படுத்தப்பட உள்ளனர். பி.சி.சி.ஐ. விருது வழங்கும் விழா மும்பையில் வரும் 21 ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவில் கிரிக்கெட்டில் சாதனை புரிந்தவர்கள் கவுரவப்படுத்தப்படுவர். இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதத்தில் சதமடித்த சச்சின் டெண்டுல்கர் பாராட்டப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. அதே போல் 2012 -13 ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற விராட் கோலிக்கு இவ்விழாவில் பாலி உம்ரிகர் விருதும், ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும் அளிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 

இவ்விருதை 2006, 2009 ம் ஆண்டுகளில் சச்சினும், 2007 ம் ஆண்டு சேவாக்கும், 2011 ம் ஆண்டில் டிராவிட்டும் பெற்றனர். சமீபத்தில் ஓய்வு பெற்ற வி.வி.எஸ். லட்சுமணன் இவ்விழாவில் கவுரவப்படுத்தப்பட உள்ளார். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான விஜய் மர்ச்சென்ட் தாட்டு பாட்கர், விஜய் மஞ்ச்ரேக்கர், வினு மண்டக்குலாம் அகமது, எம்.எல். ஜெய்சிம்மா, திலீப் சர்தேசாய் உள்ளிட்டோரும் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். இவர்களின் குழந்தைகளுக்கு கோப்பையும், தலா ரூ. 15 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இவ்விழாவில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனை விருது அளிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. முன்னரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்