எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (16.4.2013) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 710 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்கும் முகமாக முதற்பரிசு பெற்ற 20 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ``முதலமைச்சர் கோப்பை''களையும், முதற்பரிசுத் தொகையான தலா 1 லட்சம் ரூபாய்கான காசோலைகளையும் வழங்கினார்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள கூடிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உருவாகுவதை ஊக்குவிக்கவும், அவ்வாறு விளையாட்டுத் திறன் கொண்டுள்ள இளம் வீரர்களை அவரவரது திறன் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபடுத்தவும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் முக்கிய நோக்கம் பொது மக்களிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து அதன் மூலம் வெற்றி பெற்று, புகழ் ஈட்டி மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிட செய்வதுமாகும்.
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்து பந்து, நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும் மாவட்ட அளவில் நவம்பர், டிசம்பர் 2012 மற்றும் ஜனவரி 2013 ஆகிய மாதங்களில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் கலந்து கொண்ட மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாநில அளவில் தடகளம், நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து மற்றும் குழுப் போட்டிகளான கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கபடி ஆகிய போட்டிகளில் முதல் இடம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய்; இரண்டாம் இடம் வென்றவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் வென்றவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்; குழுப் போட்டிகளில் நான்காம் இடம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 710 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்க அனுமதியளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார். அதன்படி நேற்று (16.4.2013) பல்வேறு போட்டிகளில் முதற்பரிசு பெற்ற 20 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பைகளையும், முதற்பரிசுத் தொகையான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்று வாழ்த்தினார். தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த அளவுக்கு அதிகபட்ச பரிசுத் தொகை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும், தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து எதிர்வரும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களது திறனை மேம்படுத்தும் வகையில் அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும், விஞ்ஞான ரீதியில் சிறப்பு பயிற்சி பெறவும், உயர்தர விளையாட்டுக் கருவிகள் மற்றும் பயிற்சிக் கருவிகள் வாங்கிடவும், உயர்சத்து செறிவுள்ள உணவுப் பொருட்களைத் தருவித்துக் கொள்ளவும், விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக தலா 25 லட்சம் ரூபாய் அரசு உதவி பெற்றுக் கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான - தடகள (நீளம் தாண்டுதல்) விளையாட்டு வீரர் கே. பிரேம்குமார், தடகள (100 மீட்டர் தடை ஒட்டம் மற்றும் மும்முறை தாண்டுதல்) விளையாட்டு வீராங்கனை கோ. காயத்திரி, நீச்சல் விளையாட்டு வீராங்கனை ஏ.வி. ஜெயவீனா, பாய்மர படகோட்டுதல் விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், மேசைப்பந்து விளையாட்டு வீரர் க. சத்யன் ஆகியோர் இந்த சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இந்த ஐந்து தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பளிப்பு ஆணைகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து முதலமைச்சர் கோப்பைகள், பரிசுத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பளிப்பு ஆணைகளை பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் கோப்பைகள், பரிசுத்தொகை மற்றும் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகைச்செல்வன், தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.