எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.18 - சென்னை விமான நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதிக்கு மதுரை மாமன்ற கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எம்ஜிஆர் பெயரை வைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆணையாளர் நந்தகோபால், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், கே.ராஜபாண்டி மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ராஜன்செல்லப்பா முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் திமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து மாமன்றத்துக்குள் வந்தனர். முதல்வர் ஜெயலலிதா மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 247 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கும்,சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக மீண்டும் அறிவித்து தமிழுக்கு சுதந்திரம் வாங்கி தந்ததற்கும், மதுரையில் ரூ.130 கோடியில் 2 உயர்மட்ட பாலம் அமைக்க உத்தரவிட்டதற்கும், மேலும் மதுரை அருகே துணைநகரம் அமைப்பதற்கு அறிவிப்பை வெளியிட்டதற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் விமான நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைப்பதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்ட சபையில் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் ஆதரித்து பேசிவிட்டு வெளியே வந்து எதிர்ப்பதாக கூறியுள்ளார். இதே போல் திமுக தலைவர் கருணாநிதியும் எல்லா பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுவது போல் இதிலும் இரட்டை வேடம் போட்டுள்ளார். இதை கண்டிப்பதாகவும் கூறினார்.
இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று கூச்சல் போட்டனர். கருணாநிதியை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என கேட்டனர். இதற்கு அதிமுக கவுன்சிலர்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மாமன்றத்தில் கூச்சல் போட்டு கொண்டிருந்ததால் திமுக கவுன்சிலர்களை வெளியேற்றும் படி மேயர் உத்தரவிட்டார். நீங்கள் ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே கருப்பு சட்டை அணிந்து கூட்டத்திற்கு வருகிறீர்கள். நீங்கள் வந்ததுமே உங்களை வெளியேற்றி இருக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டபடி மாமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
இதை தொடர்ந்து விவாதம் தொடர்ந்து நடந்தது. மதுரை தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து பேசும் போது, மதுரை மாநகராட்சியில் புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 43 டிரைவர்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்ய வேண்டும். வரை படஅனுமதியை உதவி கமிஷனர் வழங்க அனுமதி அளிக்க வேண்டும். அம்மா திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறதா என்பதை அறிய குழு அமைக்கப்பட வேண்டும். மண்டல தலைவர்களுக்கு உரிய அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றார்.
மேயர்- இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கே.ராஜபாண்டியன்(மேற்கு மண்டல தலைவர்) மதுரை மாநகராட்சியில் அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு மண்டலத்தில் உள்ள வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதல் வாகனங்களை ஒதுக்க வேண்டும். மதுரை மாநகராட்சிக்குஉட்பட் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. எனவே ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5 லட்சம் மதிப்பிலான பணிகளை செய்ய மண்டல அளவிலேயே அதிகாரம் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேயர் - இது குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
கே.ஜெயவேல்(வடக்கு மண்டல தலைவர்) கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் கவுன்சிலர்களுக்கு படித்தொகை ரூ.800 வழங்கப்படுகிறது. அதை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் - உங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. மேலும் மதுரை 50வது வார்டில் தினசரி மார்க்கெட்டில் நீர்தொட்டி கட்டுவது, வைகை குடிநீர் திட்ட பராமரிப்பு ஊழியர்களை தினக்கூலிகளாக நியமிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக கவுன்சிலர்களுக்கு இலவச சட்டை வழங்க தயார் -மேயர்
மாமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திமுக கவுன்சிலர்கள் க ருப்பு சட்டை அணிந்து வந்தனர். அப்போது பேசிய மேயர் மாமன்ற கூட்டத்திற்கு நீங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து களங்கம் ஏற்படுத்துகிறீர்கள்.உங்களிடம் வெள்ளை சட்டை இல்லை என்றால் மாமன்றம் சார்பில் உங்களுக்கு வெள்ளை சட்டை இலவசமாக வழங்க தயார் என்று மேயர் கூறியதும், மாமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
மதுரை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 66 பள்ளிகளில் தற்போது 4 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி கல்வி முறை உள்ளது. மாநகராட்சி பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் ஆங்கில வழி கல்வி முறையில் பயன்பெறுவதற்காக 20ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 20 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை நடைமுறைப்படுத்த அரசிடம் அனுமதி கோர மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.