முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுப்பெறும் 'மிக்ஜம்' புயல் வரும் 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும்: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
Weather-Center 1

சென்னை, வங்கக் கடலில் வலுப்பெறும் மிக்ஜம் புயல் வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 

சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக மாறி, இன்று (சனிக்கிழமை) புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கும் நிலையில், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (3-ம் தேதி) புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 4-ம் தேதி வட தமிழகம் - மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது  வங்கக் கடலில் உருவாகும் இந்த  புயலுக்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட உள்ளது. மியான்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும். இந்த நிலையில் புயல் கரையைக் கடக்கும் இடம் மாறியுள்ளதால், கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; சென்னைக்கு 780 கி.மீ. தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் மையம் கொண்டுள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று, பின் புயலாக உருவாகவுள்ளது.

டிசம்பர் 3-ல் உருவாகும் புயல், 5-ம் தேதி கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 3-ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 4-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும். அப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அடுத்த 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோர பகுதி, மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து