எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________________________
டிராவிட்டுக்கு ரோகித் பாராட்டு
இந்திய அணியின் கேப்டனாக முதல் கோப்பையை வெல்ல உதவிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா உருக்கமான வாழ்த்தையும் பாரட்டையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் ராகுல் டிராவிட்தான் உங்களுடைய மனைவி என்று தம்முடைய மனைவி ரித்திகா அடிக்கடி சொல்வார் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளதாவது., பின்வருமாறு. "டியர் ராகுல் பாய். இதைப் பற்றிய எனது உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் நான் அதை சரியாக செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. எனவே என்னுடைய முயற்சி இதோ. என்னுடைய சிறு வயது நாட்களிலிருந்தே பல பில்லியன் ரசிகர்களைப் போல நானும் உங்களை பார்த்து வளர்ந்தேன். ஆனால் அதையும் தாண்டி உங்களுடன் நெருக்கமாக வேலை செய்வதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
____________________________________________________________________________
முகமது சிராஜூக்கு அரசுப்பணி
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் மரைன் டிரைவ் பகுதியிலிருந்து வான்கடே மைதானம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி பேரணி சென்றனர். கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.11 கோடி பரிசுத் தொகை அறிவித்தது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஐதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சேர்ந்த முகமது சிராஜை, தெலங்கானா முதல் - மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் மாநில அரசின் சார்பில் சிராஜுக்கு ஐதராபாத்தில் ஒரு வீடும், அரசுப் பணியும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
____________________________________________________________________________
கோலிக்கு வந்த புது பிரச்சினை
விராட் கோலிக்கு சொந்தமான 'ஒன்8 கம்யூன் பப்' என்ற நிறுவனம் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோலிக்கு சொந்தமான பப் மட்டுமின்றி எம்ஜி சாலையில் இயங்கும் பல்வேறு பப்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் தற்போது விதிகளை மீறிய பப்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இரவில் அதிக சத்தத்தில் பாடல்கள் போடப்படுவதாகவும் இது தொந்தரவாக இருப்பதாகப் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2024.
07 Oct 2024 -
சுசீந்திரன் இயக்கும் ’2கே லவ் ஸ்டோரி’.
07 Oct 2024சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’. இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
ஆலன் இசை வெளியீட்டு விழா
07 Oct 20243S பிக்சர்ஸ் சார்பில் ஆர். சிவா தயாரித்து இயக்கி, வெற்றி நாயகனாக நடித்துள்ள படம் ஆலன்.
-
இனியா நடிக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
07 Oct 2024Arun Visualz V.M.R.ரமேஷ், R.அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G.
-
ஏபிசி டாக்கீஸ் - அறிமுகம் செய்த சாக்ஷி அகர்வால்
07 Oct 2024சுயாதீன திரைப் படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஏபிசி டாக்கீஸ் ஓ.டி.டி.
-
செல்ல குட்டி விமர்சனம்
07 Oct 2024கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் டிட்டோ, மகேஷ் இருவரும் 12 ம் வகுப்பு படிக்கிறார்கள்.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
-
சாம்சங்' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அமைச்சர்கள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை
07 Oct 2024சென்னை : சாம்சங்' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
-
காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
07 Oct 2024சென்னை : காலாண்டு விடுமுறையை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
07 Oct 2024சென்னை : தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மெரினா விமான சாகச நிகழ்ச்சி: அரசின் செயலற்றதன்மையால் 5 பேர் உயிரிழந்ததாக இ.பி.எஸ். விமர்சனம்
07 Oct 2024சென்னை : சென்னை, மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன.
-
லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சந்தித்த பிரதமர் நெதன்யாகு
07 Oct 2024டெல் அவிவ் : லெபனான் எல்லையில் நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை பிரதமர் நெதன்யாகு சந்தித்து அவர்களுக்கு வெற்றி நமக்கே என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
விமான சாகச நிகழ்ச்சியில் குறைபாடுகள் இருந்ததா? - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
07 Oct 2024சென்னை : மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
-
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்
07 Oct 2024புதுடில்லி : நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, கடவுள் துர்க்கைக்கு அர்ப்பணிக்கும் வகையில் ' கர்பா' பாடல் ஒன்றை எழுதி உள்ளார்.
-
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2024புதுடெல்லி : இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில் 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று பிரதமர் மோடியை சந
-
வரத்து குறைவால் தக்காளி விலை ரூ.110 ஆக உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
07 Oct 2024போரூர் : கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி ஒரு
-
இஸ்ரேல் படைகள் தாக்குதல்: லெபனானில் பலியானோர் 4 ஆயிரத்தை தாண்டியது
07 Oct 2024பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை: மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
07 Oct 2024இம்பால் : மணிப்பூரின் கச்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப்
-
சற்று குறைந்த தங்கம் விலை
07 Oct 2024சென்னை : சற்று குறைந்த தங்கம் விலை நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
-
பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
07 Oct 2024திருவனந்தபுரம் : பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான நடிகர் சித்திக்கிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
-
அரசியல் செய்வோருக்கு தோல்விதான் மிஞ்சும்: 5 பேர் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் பேட்டி
07 Oct 2024சென்னை : 'விமான சாகச நிகழச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.
-
கேரளாவில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க., காங்., கம்யூ., கட்சிகள் - வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம்
07 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க., காங்., கம்யூ., கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் தீவிர காட்டி வருகின்றன.
-
ஹமாஸ் தாக்குதலின் முதலாண்டு நினைவு: ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
07 Oct 2024டெல் அவிவ் : பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கா
-
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் : பரூக் அப்துல்லா நம்பிக்கை
07 Oct 2024ஸ்ரீநகர் : காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
-
மெய்யழகன் வெற்றி விழா
07 Oct 20242டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது..