முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் போலீஸ் சுட்டு பைக் சாகச வீரர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.29  -  டெல்லியில் அதிகாலையில் நடந்த மோதலில் போலீஸ் சுட்டு சாகச வீரர் பலியானார். இன்னொருவர்காயமடைந்தார். டெல்லியில் வின்ட்சர் பேலஸ் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் 30 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்கள்  மூலம் நடுரோட்டில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் அபாயகரமான முறையில் பைக் சண்டையிலும் ஈடுபட்டனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குஒரு வேனில் அங்கு சென்றனர். சாகச இளைஞர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர்.  ஆனால் அவர்கள்  அங்கிருந்து கலைந்து செல்லாமல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவத்தில் போலீஸ் வேன் கண்ணாடி நொறுங்கியது. 

இதையடுத்து போலீசார் ரப்பர்குண்டுகளால் சுட்டனர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. எனவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தினர். இதனையடுத்து அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பியோட முயன்றனர். தப்பியோட முயன்றவர்களின் மோட்டார் சைக்கிள்களை பஞ்சர் செய்வதற்காக டயரை நோக்கி சுட்டனர். ஆனால் பின்னால் இருந்த கரண்பாண்டே என்பவரின் முதுகில் தவறிவிழுந்ததில் ஒருவர் பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற புனித் சர்மா என்ற இளைஞர் படுகாயமடைந்தார். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்