எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024--ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது உள்ளிட்ட பத்து விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.1.2025) தலைமைச் செயலகத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தந்தை பெரியார் விருது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது ஆகிய பத்து விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் கருணாநிதி தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கலைஞரால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கடந்த டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய நாள்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு விழா, திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியீடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலைஞரின் வழியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி விருது என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கும், 2024-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.
இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது விடுதலை இராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமாருக்கும், முதல்வர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
கலைஞர் கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024-இல் தோற்றுவிக்கப்பட்டு, முதன் முறையாக இவ்விருது முத்து வாவாசிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதுடன், விருதுத் தொகையாக பத்து லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் சிறப்பித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-03-2025.
13 Mar 2025 -
ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விடுவித்து இஸ்ரோ சாதனை
13 Mar 2025புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது ஸ்பேடெக்ஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவே
-
த.வெ.க. வில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 140ஆக உயர்த்த விஜய் முடிவு?
13 Mar 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கியூட் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்டது
13 Mar 2025புதுடில்லி, முதுகலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (கியூட்) க்கான முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க ரேவந்த் ரெட்டி முடிவு
13 Mar 2025புதுடில்லி, தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
வரும் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் டி.கே. சிவகுமார்
13 Mar 2025பெங்களூரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் டி.கே. சிவகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு
13 Mar 2025சென்னை, தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
டெல்லியில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
13 Mar 2025புதுடெல்லி, டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு
13 Mar 2025சென்னை, தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவுள்ளது.
-
கேரளாவில் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம்
13 Mar 2025திருவனந்தபுரம், கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
-
புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
13 Mar 2025புதுச்சேரி, அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
13 Mar 2025சென்னை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை, தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
இ.பி.எஸ். உடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்: அமைச்சர் ரகுபதி
13 Mar 2025சென்னை, இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்..
-
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
13 Mar 2025மதுரை, கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளத
-
போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்... ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
13 Mar 2025வாஷிங்டன், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்
-
சென்னையில் சோக சம்பவம்: 5 கோடி ரூபாய் கடன் தொல்லையால் மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை
13 Mar 2025சென்னை, சென்னை அண்ணாநகரில் மருத்துவர் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
-
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
13 Mar 2025சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
-
தனியார் பால், தயிர் விலை உயர்வு: விலை உயர்வை உடனே திரும்பப்பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்
13 Mar 2025சென்னை, விலை உயர்வை திரும்பப் பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
-
வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
13 Mar 2025சென்னை, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
முதல்முறை தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்..?
13 Mar 2025சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மின்சார ஆட்டோக்களை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
13 Mar 2025சென்னை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: கோவை பாரதியார் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் வழக்கு
13 Mar 2025கோவை: கோவை பாரதியார் பல்கலையில் தொழில்நுட்ப உபகரணங்களில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
சத்துணவு ஊழியா்களின் தணிக்கை தொகை ரூ.257 கோடி தள்ளுபடி: தமிழக அரசு உத்தரவு
13 Mar 2025சென்னை, சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை: தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.