எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள். இனிவரும் டி20 தொடர்களிலும் இதுதான் எங்களது ஸ்டைலாக இருக்கும் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி டி20...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அபிஷேக் ஷர்மா அதிரடி...
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் ஷர்மா, அதிரடியில் வெளுத்து கட்டினார். ஆர்ச்சர், ஓவர்டான் ஓவர்களில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார்.
இந்தியா வெற்றி...
பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. பில் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 10.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 97 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தோன்றுவதை செய்வோம்...
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "களத்தில் நிற்கும்போது என்ன தோன்றுகிறதோ அதை நாங்கள் செய்து வருகிறோம். அதேபோன்று இந்திய அணியில் யாருக்கெல்லாம் பந்துவீச தெரிகிறதோ அவர்களை எல்லாம் நம்பி பந்தை தருகிறோம். அவர்களும் எங்களது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.
இனி இப்படி தான்...
டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள். அதையே நாங்கள் விரும்புகிறோம். இனிவரும் டி20 தொடர்களிலும் இதுதான் எங்களது ஸ்டைலாக இருக்கும். எப்போதுமே டி20 போட்டிகளில் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்கும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும். இந்த தொடர் முழுவதுமே வருண் சக்கரவர்த்தி மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். பந்துவீச்சு மட்டுமின்றி அவர் பீல்டிங்கிலும் கடுமையாக உழைத்து வருகிறார். அதற்கு ஏற்ற பலனை அவர் தற்போது பெற்று வருகிறார்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 6 days ago |
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: பிப்ரவரி 8-ல் தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன பொதுக் கூட்டம்
03 Feb 2025சென்னை: நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அவரச வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
கார் வெடி குண்டு தாக்குல்: சிரியாவில் 15 பேர் பலி
03 Feb 2025சிரியா : சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்து முன்னணி போராட்டம்: மதுரையில் இன்றும் 144 தடை
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
பாம்பன் பால திறப்பு விழா: பிப். 11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
03 Feb 2025சென்னை: பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 10-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
03 Feb 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
இலங்கை சிறையில் இருந்து 9 காரைக்கால் மீனவர்கள் விடுதலை
03 Feb 2025காரைக்கால் : காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
03 Feb 2025அமெரிக்கா : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.
-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் 48.95 கோடி ரூபாய் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது தமிழ்நாடு அரசு
03 Feb 2025சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளத
-
வசந்த பஞ்சமி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்
03 Feb 2025உத்தரப்பிரதேசம் : வசந்த பஞ்சமியான நேற்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
-
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது: தமிழகத்தில் 963 கி.மீ. நீள 4 வழிச்சாலைகள்
03 Feb 2025சென்னை: தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: தெனாப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த டிரம்ப் திட்டம்
03 Feb 2025வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப் அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
-
கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிரான மனு தள்ளுபடி
03 Feb 2025புதுடில்லி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் தீவிரவாதி கைது
03 Feb 2025இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியில் என்னதான் நடக்கிறது? காவல் நிலைய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இ.பி.எஸ். கேள்வி
03 Feb 2025சென்னை: காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்?
-
மன்னார்குடியில் பரபரப்பு: பாபா பக்ரூதீனை அழைத்து சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள்
03 Feb 2025மன்னார்குடி: மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
03 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
தி.மு.க.வின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது : ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம்
03 Feb 2025சென்னை : தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
-
தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
03 Feb 2025புதுடெல்லி : பட்ஜெட்டில் தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
யமுனை நீரை குடிக்க முடியுமா? கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால்
03 Feb 2025புதுடில்லி: யமுனை நீரைக் குடியுங்கள், உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன் என்று கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால் விடுத்துள்ளார்.
-
பதவியேற்பு விழாவிற்கு பிரதமரை அதிபர் டிரம்ப் அழைக்காதது ஏன்? பாராளுமன்றத்தில் ராகுல் கேள்வி
03 Feb 2025புதுடில்லி: பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடியை டிரம்ப் அழைக்காதது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-02-2025.
03 Feb 2025 -
தங்கம் விலை சற்று குறைவு
03 Feb 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 680 குறைந்து விற்பனையானது.
-
ராஜபீமா விமர்சனம்
03 Feb 2025சிறு வயதில் அம்மாவை இழந்த நாயகன் ஆரவ் ஊருக்குள் வழிதவறி வந்த யானையை தானே வளர்க்கிறார்.
-
நாமக்கல்லில் சோகம்: தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்களுடன் பலி
03 Feb 2025நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.