எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இல்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை என்றும் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கூடுதல் டி.ஜி.பி. அறையில் இருந்த காப்பர் வயர்கள் மூலம் தீப்பித்துள்ளது. அறையில் பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த எரிபொருளும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இருந்ததாக கண்டறியப்பட வில்லை. கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன? - தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக். இவர், கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐ.ஜி.யாக பணியாற்றினார். அப்போது, ஜூலை 28-ம் தேதி அவரது அலுவலக அறையில் திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு த்துறையினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். இவ்விபத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு, கல்பனா நாயக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘எனது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதி திட்டம் உள்ளது. எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சதி திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டியதால் இந்த சதி திட்டம் நடந்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக தெரிகிறது.
ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து, தமிழக அரசுக்கு எதிரான கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 6 days ago |
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: பிப்ரவரி 8-ல் தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன பொதுக் கூட்டம்
03 Feb 2025சென்னை: நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அவரச வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
கார் வெடி குண்டு தாக்குல்: சிரியாவில் 15 பேர் பலி
03 Feb 2025சிரியா : சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை சிறையில் இருந்து 9 காரைக்கால் மீனவர்கள் விடுதலை
03 Feb 2025காரைக்கால் : காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
03 Feb 2025அமெரிக்கா : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.
-
பாம்பன் பால திறப்பு விழா: பிப். 11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
03 Feb 2025சென்னை: பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 10-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
03 Feb 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
இந்து முன்னணி போராட்டம்: மதுரையில் இன்றும் 144 தடை
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் 48.95 கோடி ரூபாய் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது தமிழ்நாடு அரசு
03 Feb 2025சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளத
-
வசந்த பஞ்சமி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்
03 Feb 2025உத்தரப்பிரதேசம் : வசந்த பஞ்சமியான நேற்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
-
கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிரான மனு தள்ளுபடி
03 Feb 2025புதுடில்லி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது: தமிழகத்தில் 963 கி.மீ. நீள 4 வழிச்சாலைகள்
03 Feb 2025சென்னை: தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: தெனாப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த டிரம்ப் திட்டம்
03 Feb 2025வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப் அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
-
மணிப்பூரில் தீவிரவாதி கைது
03 Feb 2025இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க.வின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது : ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம்
03 Feb 2025சென்னை : தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
03 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
தங்கம் விலை சற்று குறைவு
03 Feb 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 680 குறைந்து விற்பனையானது.
-
தி.மு.க. ஆட்சியில் என்னதான் நடக்கிறது? காவல் நிலைய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இ.பி.எஸ். கேள்வி
03 Feb 2025சென்னை: காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்?
-
மன்னார்குடியில் பரபரப்பு: பாபா பக்ரூதீனை அழைத்து சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள்
03 Feb 2025மன்னார்குடி: மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
-
பதவியேற்பு விழாவிற்கு பிரதமரை அதிபர் டிரம்ப் அழைக்காதது ஏன்? பாராளுமன்றத்தில் ராகுல் கேள்வி
03 Feb 2025புதுடில்லி: பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடியை டிரம்ப் அழைக்காதது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-02-2025.
03 Feb 2025 -
தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
03 Feb 2025புதுடெல்லி : பட்ஜெட்டில் தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
யமுனை நீரை குடிக்க முடியுமா? கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால்
03 Feb 2025புதுடில்லி: யமுனை நீரைக் குடியுங்கள், உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன் என்று கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால் விடுத்துள்ளார்.
-
வேங்கைவயல் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவு
03 Feb 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கு எஸ்.சி., எஸ்.டி.
-
ராஜபீமா விமர்சனம்
03 Feb 2025சிறு வயதில் அம்மாவை இழந்த நாயகன் ஆரவ் ஊருக்குள் வழிதவறி வந்த யானையை தானே வளர்க்கிறார்.