எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Supreme-Court 2023-04-06](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/12/Supreme-Court_2023-04-06_0.jpg?itok=56GZcO1D)
Source: provided
புதுடெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உருவாக்கப்பட்ட புதிய சட்டம், மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் பிப்ரவரி 19-ம் தேதிக்கு மாற்றியது. தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 18-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணை 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரான ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அரசு சாரா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வரும் 18-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு பெற உள்ளதை சுட்டிக்காட்டி, எனவே, இந்த வழக்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கிமானது என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி சூர்யா காந்த், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) 2023 சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவுகள், இடைக்காலத்தில் ஏதாவது நடந்திருந்தாலும் (புதிய நியமனங்கள் நடந்திருந்தாலும்) அதற்கும் பொருந்தும் என்று பிரஷாந்த் பூஷனிடம் உறுதியளித்தார்.
இந்த வழக்கு முதலில் பிப்ரவரி 12-ஆம் தேதி (நேற்று) பட்டியலிடப்பட்டதை பிரஷாந்த் பூஷன், நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார். அதற்கு நீதிபதி சூர்யா காந்த், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், வழக்கை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு மாற்றுவதாகவும், அன்றைய தினம் நிச்சயமாக வழக்கு பட்டியலிடப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள பதிவாளருக்கும் அறிவுறுத்தினார்.
முன்னதாக, இந்த வழக்கின் முந்தைய விசாரணை பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதற்கு முன்பு சட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். அதற்கு, நீதிபதி சூர்யா காந்த், இந்த வழக்கை பிப்ரவரி 12-ஆம் தேதியே விசாரித்து முடிவெடுக்க அமர்வு முயற்சிக்கும் என்று அன்றைய தினம் கூறியிருந்தார்.
பிப்.3-ம் தேதி நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டின் ஒருங்கிணைப்பு அமர்வு, மறுத்ததை சுட்டிக்காட்டி ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். 2023-ம் ஆண்டின் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டை இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைக்க மறுத்து, தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோரின் நியமனங்களை முடக்குவதற்கான விண்ணப்பங்களை தள்ளுபடி செய்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-02-2025.
12 Feb 2025 -
ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்
12 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாக உள்ளது.
-
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வாகிறார்..?
12 Feb 2025சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
-
இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை
12 Feb 2025பாரிஸ் : பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
-
பிரெஞ்சு மண்ணில் சாவர்க்கருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
12 Feb 2025பாரிஸ்: சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
-
அ.தி.மு.க. சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2025சென்னை: அ.தி.மு.க.
-
28 ஆண்டு காலம் பணியாற்றிய ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் காலமானார்
12 Feb 2025புதுடெல்லி : அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (87) நேற்று காலமானார்.
-
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
12 Feb 2025புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பணய கைதிகள் விவகாரம்: ஹமாசுக்கு நெதன்யாகு மிரட்டல்
12 Feb 2025ஜெருசலேம் : வருகிற 15-ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.
-
இனி அரசியலுக்கு ‘நோ’: நடிகர் சிரஞ்சீவி உறுதி
12 Feb 2025ஐதராபாத் : வாழ்நாள் முழுவதும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் சிரஞ்சீவி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
பணய கைதிகள் விவகாரம்: மிரட்டல் விடுத்த டிரம்புக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி
12 Feb 2025காசா : பணய கைதிகள் விவகாரம் மிரட்டலுக்கு இடமில்லை என டிரம்புக்கு ஹமாஸ் பதிலடி கொடுதத்துள்ளது.
-
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரெயில் சேவை ரத்து- தெற்கு தெற்கு ரெயில்வே அறிவிப்பு
12 Feb 2025சென்னை : ஹூப்பள்ளி-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் சேவை தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.
-
பிரான்சில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
12 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மெர்சிலி நகரில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
-
நெடுஞ்சாலை பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
12 Feb 2025சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பராமரிப்பு பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
-
இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Feb 2025புதுடெல்லி: நாட்டில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
அத்திக்கடவு-அவினாசி திட்டம்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்
12 Feb 2025சென்னை : ஜெயலலிதாவால் வித்திடப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: எதிரான வழக்கை பிப். 19-ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
12 Feb 2025புதுடெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ர
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
12 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணி நீக்கம்
12 Feb 2025சேலம்: சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்தில் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
பிரான்சில் புதிய இந்திய தூதரகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
12 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
-
மகாராஸ்டிராவில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 197 ஆக உயர்வு
12 Feb 2025புனே : மராட்டியத்தில் ஜி.பி.எஸ். தொற்று நோய் அதிகரித்து வருகிறது. இந்த நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தே.மு.தி.க. மாநிலங்களவை உறுப்பினர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு: பிரேமலதா
12 Feb 2025சென்னை : அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தே.மு.தி.க.
-
தமிழகம் முழுக்க தி.மு.க.வுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது : அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து
12 Feb 2025சென்னை : தமிழகம் முழுக்க தி.மு.க.வுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் 1.60 கோடி பேர் நீராடல்
12 Feb 2025லக்னோ : மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் 1.60 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பஸ்கள் இயக்கம்
12 Feb 2025சென்னை : வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.