எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஜெயலலிதாவால் வித்திடப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித்துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு, தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957-ம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை ஜெயலலிதாவையே சாரும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் ஜெயலலிதா.
மேலும், 07-08-2015 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது, தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை ஜெயலலிதா, பாரதப் பிரதமரிடம் வழங்கினார். இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு - அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் ஜெயலலிதா.
இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித்துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 லட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.
ஜெயலலிதாவின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக, ஜெயலலிதாவின் ஆளுமை காரணமாக, ஜெயலலிதாவின் பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜெயலலிதாவின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் பாதையில் நடைபெற்ற ஆட்சி, ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான அத்திக்கடவு -அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது.
ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது ஜெயலலிதாவின் ஆட்சி. ஜெயலலிதாவின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான். இன்றைக்கு, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் ஜெயலலிதாதான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-02-2025.
12 Feb 2025 -
ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்
12 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாக உள்ளது.
-
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வாகிறார்..?
12 Feb 2025சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
-
பணய கைதிகள் விவகாரம்: ஹமாசுக்கு நெதன்யாகு மிரட்டல்
12 Feb 2025ஜெருசலேம் : வருகிற 15-ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.
-
பள்ளிகளில் பாலியல் தொல்லையா? - புகார் எண்ணை அறிவித்தது அரசு
12 Feb 2025சென்னை : பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பஸ்கள் இயக்கம்
12 Feb 2025சென்னை : வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
பணய கைதிகள் விவகாரம்: மிரட்டல் விடுத்த டிரம்புக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி
12 Feb 2025காசா : பணய கைதிகள் விவகாரம் மிரட்டலுக்கு இடமில்லை என டிரம்புக்கு ஹமாஸ் பதிலடி கொடுதத்துள்ளது.
-
தே.மு.தி.க. மாநிலங்களவை உறுப்பினர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு: பிரேமலதா
12 Feb 2025சென்னை : அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தே.மு.தி.க.
-
தங்கம் விலை ரூ.960 குறைவு
12 Feb 2025சென்னை : தொடர்ந்து விலையுயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அச்சத்தில் ஆழ்த்திய தங்கம் விலை நேற்று (பிப்.12) சற்றே ஆறுதல் தரும் வகையில் ப
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
12 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை
12 Feb 2025பாரிஸ் : பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
-
தொண்டர்களை நம்பிதான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது : கனிமொழி எம்.பி. விளக்கம்
12 Feb 2025விழுப்புரம் : தொண்டர்களை நம்பி தான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிரோம் என்று கனிமொழி எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரெயில் சேவை ரத்து- தெற்கு தெற்கு ரெயில்வே அறிவிப்பு
12 Feb 2025சென்னை : ஹூப்பள்ளி-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் சேவை தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.
-
28 ஆண்டு காலம் பணியாற்றிய ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் காலமானார்
12 Feb 2025புதுடெல்லி : அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (87) நேற்று காலமானார்.
-
3-வது போட்டியிலும் வெற்றி: இங்கிலாந்தை ஒயிட் வாஶ் செய்தது இந்தியா
12 Feb 2025காந்தி நகர் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று அசத்திய
-
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவிற்கு பிரான்ஸ் நிச்சயம் ஆதரவு அளிக்கும் : பிரதமர் மோடியிடம் அதிபர் மேக்ரான் உறுதி
12 Feb 2025பாரிஸ் : ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் உறுதி அளித்தார்.
-
மகாராஸ்டிராவில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 197 ஆக உயர்வு
12 Feb 2025புனே : மராட்டியத்தில் ஜி.பி.எஸ். தொற்று நோய் அதிகரித்து வருகிறது. இந்த நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
சீமானுக்கு உளறுவதே வழக்கம்: த.வெ.க. பதில்
12 Feb 2025சென்னை : சீமானுக்கு எதையாவது உளறுவதே வழக்கம் என்று தவெக பதிலடி கொடுத்துள்ளது.
-
சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணி நீக்கம்
12 Feb 2025சேலம்: சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்தில் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Feb 2025புதுடெல்லி: நாட்டில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: எதிரான வழக்கை பிப். 19-ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
12 Feb 2025புதுடெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ர
-
ஒரே மைதானத்தில் 3 வடிவிலான போட்டியில் சதம் அடித்து கில் சாதனை
12 Feb 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
அ.தி.மு.க. சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2025சென்னை: அ.தி.மு.க.
-
ஆப்கானிஸ்தான் வீரர் விலகல்
12 Feb 20258 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
-
சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: காங். முன்னாள் எம்.பி. குற்றவாளி : டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
12 Feb 2025புதுடெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை ச