முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.96 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை தவறவிட்ட பயணி

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 - சென்னையில் தனது நோயாளி தாயை பார்க்க வந்த ஆந்திர நகை வியாபாரி ரூ.96 லட்சம் மதிப்புள்ள 4 1/2 கிலோ தங்கட்டிகளை ஆட்டோவில் தவற விட்டுவிட்டார். இது பற்றி விபரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் அரீஸ்குமார் (33) நகை வியாபாரியாக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்த தனது தாயாரை பார்க்க சென்னை வந்த அரீஸ்குமார் அதற்கு முன்பு தனக்கு தெரிந்த நகை கடை முதலாளியிடம் நகை செய்ய 4 1/2 கிலோ தங்ககட்டிகளை நகை செய்வதற்காக வாங்கியுள்ளார். இவற்றின் மதிப்பு 96 லட்சம்.

நகை கட்டிகளுடன் தனது தாயாரை மருத்துவமனைக்கு சென்று பார்த்த அரீஸ்குமார் பிறகு தனது அறைக்கு ஆட்டோவில் திரும்பி உள்ளார். வழியில் ஆயிரம் விளக்கில் இறங்கி விட்டார்.

இறங்கும்போது தங்ககட்டிகளை ஆட்டோவில் தவற விட்டு விட்டார். பிறகு அந்த ஆட்டோவை தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை. இது பற்றி ஆயிரம் விளக்கு போலீசில் அரீஸ்குமார் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கட்டிகளுடன் மாயமான ஆட்டோவை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்