முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லோருக்கும் சம வாய்ப்பு-சமநீதி: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      தமிழகம்
kv-chezhiyan 2025-01-21

சென்னை, எல்லோருக்கும் எல்லாம்; சம வாய்ப்பு; சமநீதி, சமூகநீதி என்பதை உயர்கல்வியில் நிலைநாட்டியிருக்கின்றோம் என்றால் அது நம்முடைய முதல்வர் ஆட்சியில் தான் என்று அமைச்சர் கோவி.செழியன் பேசினார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று சென்னை தனியார் ஹோட்டலில் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கான பணியிடை பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"எல்லோருக்கும் எல்லாம்" என்கிற சமூகநீதியின் சாரத்தைப் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் நம் தமிழ்நாடு முதல்வர் பரவலாக்கி உள்ளார். எல்லோருக்கும் எல்லாம்; சம வாய்ப்பு; சமநீதி, சமூகநீதி என்பதை உயர்கல்வியில் நிலைநாட்டியிருக்கின்றோம் என்றால் அது நம்முடைய முதல்வர் ஆட்சியில் தான்.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசையில் இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நமது மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கு நிர்வாகத் திறன் மற்றும் செயல்திறன் சார்ந்த அணுகுமுறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி வழங்குகிறது.

தமிழ்நாட்டின் உயர் கல்விச் சூழலை மேம்படுத்துவதில், அரசு பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளின் முதன்மை பொறுப்பாளர்களாக திகழும் பதிவாளர்களுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் தற்போது 65 உயர் அலுவலர்கள் பங்கேற்று உள்ளனர்.

மேலும், ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழக அளவில் ஒரு நிபுணர் குழுவை (பல்கலைக்கழகம், உயர்கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் நிதி துறைகள்) அமைத்து மிக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைப் பத்திகளை பரிசீலித்து தீர்வு காண வேண்டும். பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் பருவத்தேர்வுகள் நடத்தவும், தேர்வு முடிவுகள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளியிடுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும். முதுநிலை படிப்பில் சேருவதற்கு ஒரு மாதிரி கால அளவினை உறுதி செய்திட வேண்டும்.

 மேலும், வரும் மே 3-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சட்டப் போராட்டத்தை நடத்தி பல்கலைக்கழக உரிமையை மீட்டுத் தந்த நமது முதல்-அமைச்சர் அவர்களுக்கு கல்லூரி முதல்வர்கள், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பினர், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வியாளர்கள் சார்பாக மாபெரும் பாராட்டுவிழா நடத்திட விருப்பத்தினை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து