எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐ.பி.எல். சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது.
இது குறித்து ரோகித் கூறியதாவது:- இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை. என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
______________________________________________________________________________________________
100-வது போட்டியில் ராகுல் தெவாதியா
குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா தனது 100ஆவது ஐ.பி.எல். போட்டியில் டில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடினார். ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமானார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான ராகுல் தெவாதியா 99 ஐ.பி.எல். போட்டிகளில் 1,043 ரன்கள், 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் என அடித்து போட்டியை வென்று கொடுத்துள்ளார். சிறந்த பினிஷராக அறியப்பட்டு வரும் ராகுல் தெவாதியா சமீபகாலங்களில் சுமாராகவே விளையாடி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. ராகுல் தெவாதியாவின் 100ஆவது போட்டிக்காக ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
______________________________________________________________________________________________
கம்மின்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்சின் மனைவி ரெபேக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெபேக்கா விமான நிலையத்தில் தனது லக்கெஜ் பெட்டிகளுடன் கம்மின்சும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'குட்பை இந்தியா, இந்த அழகான நாட்டைப் பார்வையிடுவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விலகிவிட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
______________________________________________________________________________________________
இங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம்
இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஜோ தாம்சன், அங்குள்ள ரோச்டாலே, கார்லிஸ்லே யுனைடெட், சவுத் போர்ட், பரி உள்ளிட்ட கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். 36 வயதான் தாம்சன் நடுகள வீரராக 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் ஆடியதில்லை.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாம்சனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரது விருப்பப்படியே அவரது இல்லத்தில் குடும்பத்தினர் சுற்றி இருக்க உயிர் பிரிந்தது.
______________________________________________________________________________________________
டெல்லியை பின்னுக்கு தள்ளிய ஆர்.சி.பி
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி (45 தோல்வி, டெல்லி மைதானம்) இருந்தது.
______________________________________________________________________________________________
ஐ.பி.எல். தொடரில் டேவிட் சாதனை
ஐ.பி.எல். தொடரின் போட்டி ஒன்றில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி. 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்.சி.பி. அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்.சி.பி. அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா அறிவிப்பு
19 Apr 2025பெய்ஜிங் : சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சீனா கெடுபிடிகளை தளர்த்தியிருந்த நிலையில், இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயாராகவுள்ளதாக சீனா
-
இன்று ஈஸ்டர் பண்டிகை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Apr 2025சென்னை : உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினரால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
-
நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 Apr 2025ஊட்டி : புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
மேல்பாதி திரௌபதியம்மன் கோவிலில் 3-வது நாளாக மக்கள் தரிசனம் செய்ய வரவில்லை
19 Apr 2025விழுப்புரம், மேல்பாதி திரௌபதியம்மன் திருக்கோவில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.
-
அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு
19 Apr 2025சென்னை, பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார்.
-
கனடாவில் துப்பாக்கி சூடு: இந்திய மாணவி பலி
19 Apr 2025ஒட்டாவா : கனடாவில் துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி உயிரிழந்தார்.
-
வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் படுகொலை: இந்தியா கடும் கண்டனம்
19 Apr 2025புதுடெல்லி, வங்கதேசத்தில் பபேஷ் சந்திர ராய் என்ற இந்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஈக்வடார் நாட்டில் பயங்கரம்: சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
19 Apr 2025ஈக்வடார் : ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.
-
ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; 74 பேர் உயிரிழப்பு
19 Apr 2025சனா : ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நீங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்: த.வெ.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் காணொளியில் விஜய் கலந்துரையாடல்
19 Apr 2025சென்னை : தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளிடம் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாடினார்.
-
பயிற்சியின் போது கார் விபத்தில் மீண்டும் சிக்கிய நடிகர் அஜித்
19 Apr 2025பிரசல்ஸ் : பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் நடைபெற்ற ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
19 Apr 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது
-
வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து பலி
19 Apr 2025கோவை : வெள்ளயங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
-
சென்னையில் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கியது : குறைந்தபட்ச கட்டண் ரூ.35-ஆக நிர்ணயம்
19 Apr 2025சென்னை : சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் நேற்று (ஏப்.19) முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 90-க்கும் மேற்பட்டோர் பலி
19 Apr 2025டெய்ர் அல்-பலா (காசா பகுதி) : இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் காசாவில் இரண்டே நாட்களில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
ம.தி.மு.க முதன்மை செயலாளர் பொறுப்பு: துரை வைகோ திடீர் விலகல்
19 Apr 2025சென்னை : ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
-
ஆன்மிக, சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் : மத்திய சைபர் ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை
19 Apr 2025புதுடெல்லி : ஆன்மிகம் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்தியாவின் சைபர் குற்றங்
-
80 ஆயிரம் ஆப்கானியர்களை வெளியேற்றிய பாகிஸ்தான்..!
19 Apr 2025இஸ்லாமாபாத் : ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை: துரை வைகோ அதிரடி பேட்டி
19 Apr 2025சென்னை : தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், அதில் விருப்பம் இல்லை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
-
குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி
19 Apr 2025சென்னை : குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
-
தொடர்ந்து 9-வது முறையாக பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் போட்டியின்றி தேர்வு
19 Apr 2025புவனேஸ்வர் : பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 9-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
19 Apr 2025போபால் : மத்திய பிரதேசத்தில் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
இந்து மத தலைவர் கடத்தி, படுகொலை
19 Apr 2025டாக்கா : வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
-
டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு
19 Apr 2025புதுடெல்லி : தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நேற்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
-
முர்ஷிதாபாத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஆறுதல்
19 Apr 2025கொல்கத்தா : முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்றும் அவ்வாறு உண