முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைதானத்திற்கு தனது பெயர்: ரோகித்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rohit-Kohli-Bumra 2024-07-1

Source: provided

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐ.பி.எல். சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது. 

 

இது குறித்து ரோகித் கூறியதாவது:- இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை. என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம்.  தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

______________________________________________________________________________________________

100-வது போட்டியில் ராகுல் தெவாதியா

குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா தனது 100ஆவது ஐ.பி.எல். போட்டியில் டில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடினார். ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமானார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான ராகுல் தெவாதியா 99 ஐ.பி.எல். போட்டிகளில் 1,043 ரன்கள், 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் என அடித்து போட்டியை வென்று கொடுத்துள்ளார். சிறந்த பினிஷராக அறியப்பட்டு வரும் ராகுல் தெவாதியா சமீபகாலங்களில் சுமாராகவே விளையாடி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. ராகுல் தெவாதியாவின் 100ஆவது போட்டிக்காக ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

______________________________________________________________________________________________

கம்மின்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. 

இந்த போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்சின் மனைவி ரெபேக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெபேக்கா விமான நிலையத்தில் தனது லக்கெஜ் பெட்டிகளுடன் கம்மின்சும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'குட்பை இந்தியா, இந்த அழகான நாட்டைப் பார்வையிடுவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விலகிவிட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

______________________________________________________________________________________________

இங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம்

இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஜோ தாம்சன், அங்குள்ள ரோச்டாலே, கார்லிஸ்லே யுனைடெட், சவுத் போர்ட், பரி உள்ளிட்ட கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். 36 வயதான் தாம்சன் நடுகள வீரராக 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் ஆடியதில்லை.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாம்சனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரது விருப்பப்படியே அவரது இல்லத்தில் குடும்பத்தினர் சுற்றி இருக்க உயிர் பிரிந்தது.

______________________________________________________________________________________________

டெல்லியை பின்னுக்கு தள்ளிய ஆர்.சி.பி 

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி (45 தோல்வி, டெல்லி மைதானம்) இருந்தது.

______________________________________________________________________________________________

ஐ.பி.எல். தொடரில் டேவிட் சாதனை

ஐ.பி.எல். தொடரின்  போட்டி ஒன்றில்  முதலில் விளையாடிய ஆர்.சி.பி. 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்.சி.பி. அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்.சி.பி. அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.

இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து