எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, அனைத்து மாநில முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி - வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் பற்றி மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அதில், தாக்குதல் சம்பவம் நடந்த பைசரன் புல்வெளியைத் திறக்க அனுமதி இல்லை என்றும் காவல்துறை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் புல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் சம்பவம் அரங்கேறிய இடத்திற்கு நடந்து அல்லது குதிரை மூலம் மட்டும் பயணம் செய்ய முடியும் என்பதால்தான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல தாமதம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சர்அமித் ஷா விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை பைசரனில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த தகவல் தொடர்பு சிக்னலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தீவிரவாதிகள் எந்த தகவல் தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் அமித் ஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா: தமிழக அரசாணை வெளியீடு
27 Apr 2025சென்னை : ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
மாற்று பணி ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி துறை உத்தரவு
27 Apr 2025சென்னை : மாற்றுப் பணி உத்தரவு பெற்று, வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனே அங்கிருந்து விடுவித்து அவரவர் பள்ளிகளுக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவ
-
இந்தியா உடனான வர்த்தக முறிவு எதிரொலி: மருந்து பொருட்களுக்கு பாகிஸ்தானில் தட்டுப்பாடு?
27 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளி
-
பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்த காலக்கெடு நிறைவு
27 Apr 2025புதுடெல்லி : இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவு பெற்றது.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் : பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் பேச்சு
27 Apr 2025லாகூர் : கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்
27 Apr 2025புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) எடுத்
-
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
27 Apr 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்: காவல்துறைக்கு உளவுத்துறை பட்டியல்
27 Apr 2025புதுடெல்லி : தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உள
-
விஜய் பேச்சு தி.மு.க.வின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்
27 Apr 2025தஞ்சாவூர் : விஜய்யின் பேச்சு தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
புதின் மீது டிரம்ப் அதிருப்தி: உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த தயார் நிலையில் ரஷ்யா..!
27 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மாணவர்களை வெயிலில் செல்ல பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் : தமிழக கல்வித்துறை வேண்டுகோள்
27 Apr 2025சென்னை : மாணவர்களை வெயிலில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என பெற்றோருக்கு கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைந்து விற்க தமிழக அரசு உத்தரவு
27 Apr 2025சென்னை : எம்-சாண்டு மணல், ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்படட விலையிலிருந்து ரூ.1000- குறைத்து விற்பனை செய்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வக்பு நிலங்களில் வளர்ச்சி பணிகள்: தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி
27 Apr 2025ராமேசுவரம் : வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலி இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து அனுமதிகளை வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவி
-
கோவையில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
27 Apr 2025கோவை : கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை, கோவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே
-
சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு தற்போது குறைவு : காவல் ஆணையர் அருண் தகவல்
27 Apr 2025சென்னை : போக்குவரத்து போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் அணியில் வி.சி.க. ஒருபோதும் இடம்பெறாது : திருமாவளவன் திட்டவட்டம்
27 Apr 2025புதுச்சேரி : பா.ஜ.க.வும், பா.ம.க.வும் இருக்கும் அணியில் வி.சி.க. இடம்பெறாது என்று அதன் தலைவர் தொல் திருமாளவளவன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2025
27 Apr 2025 -
300 சிக்ஸர்கள்: புதிய சாதனையை நிகழ்த்த தவறிநார் ரோகித் சர்மா..!
27 Apr 2025மும்பை : லக்னோவுக்கு எதிரான போட்டியில் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா தவற விட்டார்.
-
பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் - எப்.பி.ஐ. தலைவர் உறுதி
27 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று அமெரிக்க எப்.பி.ஐ. தலைவர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு
27 Apr 2025சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள் - வீதிகள்
27 Apr 2025ஸ்ரீநகர், : பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.
-
கலப்பின கஞ்சாவுடன் மலையாள திரைப்பட இயக்குநர்கள் 2 பேர் கைது
27 Apr 2025கொச்சி : கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பாக்.கில் 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
27 Apr 2025லாகூர் : ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
-
மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு
27 Apr 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: தேவஸ்தானம் எச்சரிக்கை
27 Apr 2025திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மிகுந்த விழிப்புடன் கும்பலாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை