எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெலிங்டன், பிப். 16 - நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நடந்து வரும் 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்னைக் குவித்து உள்ளது.
இந்திய அணியின் இன்னிங்சில் ரகானே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு முதலாவது சதமாகும். ஷிகார் தவான் 2 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவவிட்டார்.
இந்தியா _நியூசிலாந்து அணிகள் மோதும் 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. வில்லியம்சன் அதிகபட்சமாக 47 ரன் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், மொகமது சமி 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன் எடுத்து இருந்தது.
துவக்க வீரர் ஷிகார் தவான் 71 ரன்னும், நைட் வாட்ச்மேனாக இறங்கி ய இஷாந்த் சர்மா 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 2_வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இஷாந்த் சர்மா 26 ரன் எடுத்து இருந்த போது போல்ட் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து விராட் கோக்லி களம் வந்தார். மறுமுனையில் இருந்த தவான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிருஷ்டவசமாக 98 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
127 பந்துகளில் 14 பவுண்டரி , ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். முதல் டெஸ்டில் தவான் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து இருந்தது.
அப்போது விராட் கோக்லி 27 ரன்னையும், ரகானே 22 ரன்னையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
பொறுப்புடன் விளையாடி வந்த கோக்லி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அவுட் ஆனார். அவர் 38 ரன்கள் எடுத்தார்.
7_வது விக்கெட்டுக்கு ரகானே, கேப்டன் தோனி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ரகானே 93 பந்தில் 50 ரன்னை (7 பவுண்டரி) தொட்டார்.
81_வது ஓவரில் நியூசிலாந்து புதிய பந்தை எடுத்தது. 82.3 _ வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னைத் தொட்டது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு தோனி 50 ரன்னை எடுத்தார்.
இந்த ஜோடியை போல்ட் பிரித்தார். தோனி 68 ரன் எடுத்திருந்த போது, பெவிலியன் திரும்பினார். 86 பந்தில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
அப்போது, ஸ்கோர் 348 ஆக இருந்தது. 7 _வது விக்கெட் ஜோடி 120 ரன் எடுத்தது சிறப்பானதாகும். பின்பு 8 _வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேசா ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார்.
அவர் தன் பங்குக்கு 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஜாஹீர்கான் இறங்கினார். 98.4 ஓவரில் இந்திய அணி 400 ரன்னை குவித்தது.
மறுமுனையில் இருந்த ரகானே தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து அவர் 103 ரன்னை எடுத்தார்.
149 பந்துகளில் 15 பவுண்டரியுடன் அவர் சதம் அடித்தார். 5_வது டெஸ்டில் விளையாடும் ரகானேவுக்கு இது முதல் சதம் ஆகும்.
ரகானே 118 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். 158 பந்துகளில் 17 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். இந்திய அணி 102.4 ஓவரில் 438 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது நியூசிலாந்து ஸ்கோரை விட 246 ரன் கூடுதலாகும்.
ஜாஹீர்கான் கடைசியாக 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். போல்ட், சௌதி, வாக்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
246 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2_வது இன்னிங்சைஆடியது. ஆட்டத்தின் 2_வது ஓவரில் தொடக்க ஜோடியை ஜாஹீர்கான் பிரித்தார்.
புல்டான் 1 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யு. ஆனார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்து இருந்தது.
இந்தப் போட்டி இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
நியூசிலாந்து அணியின் எஞ்சிய 9 விக்கெட்டுகளை 221 ரன்னுக்குள் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். இன்று இந்திய பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தினால் இனன்னிங்ஸ் வெற்றியை பெற முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.