எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.10 - மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற இன்று நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.வின் மானம் காற்றில் பறந்துகொண்டியிருக்கிறது. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாது கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. அதோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறிவிட்டது. அதோடுமட்டுமல்லாது தற்போது தி.மு.க. அமைச்சர் தயாநிதி மாறனும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏர்செல் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் சன் டி.வியில் முதலீடு செய்ய வற்புறுத்தியகாவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இல்லாவிட்டால் வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடமாட்டோம் என்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி காங்கிரஸ் மீது கடும் கோபம் கொண்டியிருப்பதாக தெரிகிறது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழியை பார்க்க சென்ற சோனியாவை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை சோனியா காந்தி புறக்கணித்துவிட்டாரோ என்னமோ தெரியவில்லை. கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டிலும் ஜாமீன் கிடைக்காது என்று கருதிய கருணாநிதி, பெரியார் பிறந்த தினத்தன்று கூடா நட்பு கேடாய் முடியும் என்றார். அதாவது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கக்கூடாது. இனிமேலும் வைக்கக்கடாது என்ற அர்த்தத்தில் கூறியுள்ளார் என்பது உண்மையாகும். மேலும் கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை என்று தெரிந்ததும் தி.மு.க. உயர்நிலைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார். இந்த கூட்டத்தில் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
கூட்டத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற முடிவு எடுக்கலாம் என்று தெரிகிறது. அப்படி முடிவு எடுத்தால் ஆ.ராசா மாதிரி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது மாதிரி, தயாநிதி மாறனுக்கும் அந்தகதி ஏற்படாமல் தவிர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் எம்.கே. அழகிரி,எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காந்தி செல்வம், டி.நெப்போலியன், எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. வும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் முக்கிய கூட்டணி கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா 18 எம்.பி.க்கள் உள்ளனர்.
காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறினாலும் அரசுக்கு ஆதரவு தொடரும் என்று காங்கிரசார் பேசிக்கொள்கிறார்கள். அதேசமயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகினால் மத்திய அரசின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் காங்கிரசார் ஒப்புக்கொள்வதாக தெரிகிறது. தி.மு.க.வை கூட்டணியில் இருந்து விலக்கினால் நாங்கள் ஆதரவு கொடுக்கத்தயார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றுத்தருவதாக உறுதி அளித்திருந்தார். அ.தி.மு.க. வில் தற்போது லோக்சபை எம்.பி.க்கள் 9 பேர் உள்ளனர். அடுத்தவாரம் முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல உள்ளார். அப்போது ஏற்கனவே சொன்ன உறுதிமொழியை மீண்டும் கூறுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் மேலிடமும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தோடு தேனீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். மேலும் தமிழக கவர்னராக இருக்கும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவுடைகிறது. அதன்பின்னர் மார்க்கெரட் ஆல்வாவை கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் உறவு வைத்துக்கொள்வதற்காகவே மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்றும் பேசப்படுகிறது.
இதற்கிடையில் தி.மு.க. கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படலாம் என்ற சஞசலத்தில் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க. உயர்மட்ட கூட்டம் கூறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தி.மு.க. மேல்மட்ட கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு தகுந்தவாறு எங்களது பதில் நடவடிக்கை இருக்கும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்