எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.15 - கடந்த வாரம் காணாமல் போன வழக்கறிஞரின் உடன் நேற்று ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது. அவர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவரது தந்தை வழக்கறிஞர் சங்கரசுப்பு கோர்ட்டில் மனு செய்ததை ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. பிரபல வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார். இவரும் சட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கடந்த 7ந்தேதி இரவு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சங்கரசுப்பு, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார். அதில் மாயமான எனது மகனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டவில்லை. தனிப்படை அமைத்து அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. ஐ.சி.எப். வடக்கு காலனியில் உள்ள ஏரி அருகே சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளும், செல்போனும் கண்டெடுக்கப்பட்டது. அருகில் இருந்த ஏரியில் மூழ்கி சதீஷ்குமார் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
கடந்த 4 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் ஏரியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் சதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. அதனை பார்த்து அவரது தந்தை சங்கரசுப்பு, தாய் மயிலம்மாள் ஆகியோர் கதறி அழுதனர். கடந்த 7 நாட்களாக சதீஷ்குமார் பற்றி எந்தவித தகவலும் இல்லாமல் இருந்ததால், அவர் எங்காவது வெளியில் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டது உறவினர்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதீஷ்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை சதீஷ்குமாரை யாராவது கொன்று ஏரியில் வீசினார்களா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சதீஷ்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றார். இந்த நிலையில் சதீஷ் குமார் தந்தை வக்கீல் சங்கரசுப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகனின் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது. வலது கை சுண்டு விரல் சிதைக்கப்பட்டுள்ளது. இடது கையில் ரத்தக்கறை படிந்த காயம் உள்ளது. கழுத்தின் பின்பக்கத்தில் 3 அங்குல ஆழத்துக்கு காயம் உள்ளது. கால் விரல் நகங்கள் அகற்றப்பட்டு உள்ளது. முன் நெற்றியில் ரத்தக் காயங்கள் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மனிதாபிமானமற்ற முறையில் பலர் சேர்ந்து எனது மகனை கொடூரமாக கொலை செய்து இருப்பதாக அஞ்சுகிறேன் என் மீது கொண்ட பகையின் காரணமாக கூலிப்படை உதவியுடன் எனது மகனை கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொலை செய்து ஐ.சி.எப். ஏரியில் தூக்கிப் போட்டதாக கருதுகிறேன்.
எனவே எனது மகனின் உடலை நான் கூறும் தடயவியல் டாக்டர் உதவியுடன் கொண்ட மருத்துவ குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும். இதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு nullநீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. சங்கரசுப்பு சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து nullநீதிபதி சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஆவடி மருத்துவமனைகளில் தடயவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மனுதாரர் கூறும் தடயவியல் மருத்துவ குழு துணையுடன் சதீஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.