எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜெயலலிதாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு மற்றும் அனுதாப அலை பெருகி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஜெயலலிதா மீதான வழக்கில் கடந்த 27ம் தேதியன்று கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட செய்தி அறிந்ததும் ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளிப்பில் ஆழ்ந்தது. தமிழகம் சோகக் கடலில் மூழ்கியது. தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். என்றைக்கும் எங்களுக்கு அம்மாதான் முதல்வர் என்று கூறிய அவர்கள் அதற்கு காரணம் அம்மா ஒருவர்தான் தமிழக மக்களுக்கு நல்லது செய்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தி.மு.க. தலைவர் கருணாநிதியின், கொடும்பாவிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வணிகர்கள், கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கடையடைப்பு போராட்டம் கடந்த 3 நாட்களாகவே நீடிக்கிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர் போன்ற முக்கிய நகரங்களில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் ஆங்காங்கே கட்சியினரும், பொதுமக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். இது ஒன்றும் இறுதி தீர்ப்பல்ல என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். ஜெயலலிதா தடைகளை தாண்டி அவற்றை தகர்த்தெறிந்து மீண்டு வருவார் என்று தோழமை கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரபல பத்திரிகையாளர் சோ கூறுகையில், ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை பெருகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தையே பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.. 1.76 லட்சம் கோடி கொள்ளையடித்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது ஜெயலலிதாவுக்கு இப்படி தீர்ப்பு வழங்குவதா என்று ஒரு சாதாரண குடிமகனும் புலம்புகிறார். அது மட்டுமல்ல, வரைமுறையே இல்லாமல் ரூ. 100 கோடி அபராதம் விதிப்பதா என்றெல்லாம் பொதுமக்களே புலம்புகிறார்கள். இந்த தீர்ப்பு குறித்து பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறிய போது, இந்த தீர்ப்பை கூறிய நீதிபதி குன்ஹா, மிகப் பெரிய தவறு இழைத்து விட்டார். சட்டத்தின் கோட்பாடுகளை அவர் மதிக்கவில்லை என்று கொதித்துப் போய் கூறியுள்ளார். சட்டத்தின் எல்லையை தாண்டி அவர் தீர்ப்பு கூறி இருப்பதாகவும் ஜெத்மலானி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராட்டக் களத்தில் குதித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் பங்கேற்று நாங்கள் என்றென்றும் ஜெயலலிதாவின் பக்கமே என்று கூறியுள்ளனர். காரணம், ஜெயலலிதா கலையுலகிற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் சேவை செய்தவர். அது மட்டுமல்ல, திரையுலகிற்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியவர் ஜெயலலிதா. திருட்டு விசிடி ஓழிப்பில் முக்கிய பங்காற்றியவரும் அவரே.
அதனால்தான் அவருக்கு அனைத்து துறையை சேர்ந்தவர்களும் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள். திரையுலகிற்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்குமே பல நன்மைகளை செய்தவர் ஜெயலலிதா. கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் மற்றும் சீருடைகள் என அனைத்து சலுகைகளையும் வழங்கி கல்வி புரட்சிக்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதே போல் தாய்மார்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு தாலிக்கு தங்கம், கறவை மாடுகள், ஆடுகள் என அனைத்தையும் வழங்கி அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் மக்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, மக்களின் நன்மை கருதி அவர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது. அன்னதான திட்டம் முதல் அனைத்து திட்டங்களும் அவரது நல்ல உள்ளத்தை பறைசாற்றுகின்றன.
தாகம் தீர்ப்பது புண்ணியம் என்பார்கள். அதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா அம்மா குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இத்திட்டத்தின் படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 10க்கு வழங்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் இதை வாங்கி பலனடைகிறார்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள். அந்த உப்பையும் குறைந்த விலையில் வழங்கியவர் ஜெயலலிதா.
அதன் பிறகு அம்மா மருந்தகங்களை தொடங்கி வைத்த ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்த ஒப்பற்ற திட்டம்தான் சலுகை விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் திட்டம். இந்த திட்டத்தின் படி ஒரு மூட்டை சிமெண்ட் ரூ. 190 க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு உன்னத திட்டம் என்றால் அதுதான் அம்மா உணவக திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் வயிறார சாப்பிட்டு வருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்து சாதங்களும் வழங்கப்படுகின்றன. இப்படி மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவக திட்டத்திற்கு வெளி மாநிலங்களிலும் வரவேற்பு பெருகி வருகிறது. இந்த திட்டத்தை ஆந்திர மாநிலமும் பின்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி நாள்தோறும் மக்களை பற்றியே சிந்தித்து அவர்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமின்றி அவற்றை நிறைவேற்றியும் காட்டியவர் ஜெயலலிதா.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களுக்காக நான், மக்களால் நான் என்று குறிப்பிட்டதை இன்றளவும் மறக்க இயலாது. இப்படி பட்டியலிட முடியாத திட்டங்களை செயல்படுத்திய ஒரே காரணத்தால்தான் அவருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு மற்றும் அனுதாப அலை பெருகியுள்ளது என்றால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்