எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வலியுறுத்தியபடி சரக்கு, சேவை வரி மசோதாவில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இதுதொடர்பாக மாநில நிதியமைச்சர்கள் குழுவை அமைத்து குறைகளை போக்கவேண்டும் என்றும் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
எனது மதிப்பிற்குரிய தலைவர் அம்மா(ஜெயலலிதா) சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதாவால் மாநிலங்களின் நிதி தன்னாட்சியில் ஏற்படும் விளைவுகள் மற்றும் இந்த வரிமுறையால்உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அடிக்கடி சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
எனவே,இந்த மசோதா தொடர்பான அரசியல் சட்ட திருத்தம் செய்வதற்கு முன் மத்திய அரசு ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஜிஎஸ்டி தொடர்பான,இழப்பீடு வழங்கும் காலம்,வருவாய் விகிதம், வரிவிதிப்பு முறை, ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் வணிக பொருட்கள் ஆகியவற்றை தெளிவுப்படுத்த வேண்டும்.அப்போதுதான், மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு தொடர்பான அச்சம் போக்கப்படும்.
இந்த விஷயத்தில் இழப்பீடு வழங்கப்படும் விதம் தொடர்பாக அரசியல் சட்டத்தில் 120வது சட்டத்திருத்த மசோதா குறித்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு இருப்பதாக நான் அறிகிறேன். என்றாலும் கூட, மாநிலங்களுக்கு உள்ள இன்னும் ஏராளமான குறைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது.இந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முன்பே இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. வரைவு மசோதாவில் ஜிஎஸ்டி (சேவை சரக்கு வரி) கவுன்சில் வாயிலாக கூடுதல்வரி செஸ் வரி,விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் ஆகியவை பற்றி பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தை தெளிவுப்படுத்த வேண்டுமானால், வருவாயில் பாரபட்சமற்ற நிலை மற்றும் இரட்டை கட்டுப்பாடு, இழப்பீடு வழங்கும் முறை ஆகியவை குறித்து அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் மூலம் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில்அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட இந்த அமைப்பின் மூலம் மாநிலங்களில் நிதி சுதந்திரம் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களை விட்டுக்கொடுப்பதாக அமைந்து விடும். மேலும் இந்த கவுன்சிலில் மத்திய அரசுக்கு உள்ள வீட்டோ அதிகாரம் மற்றும் மாநிலங்களிடையே ஏற்படும் வேறுபாடற்ற தன்மை ஆகியவற்றுக்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறோம். எங்களது ஆட்சேபங்களுக்கு இடையே பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல்,டீசல் போன்றவை தற்போது மாநிலங்களில் வாட் வரிக்கு அப்பாற்பட்டு ஜிஎஸ்டி மசோதாவுக்கு உட்பட்டதாக்கி இருக்கிறது.இருப்பினும் இந்த வரி விதிப்பு எப்போது அமுலுக்கு வரும் என்பது ஜிஎஸ்டி கவுன்சிலை பொறுத்ததாகும்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிவசூல் மற்றும் குறுகிய கால வினியோகம், விற்பனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால்,இந்த பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும்போது, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
மேலும், எரிசக்தி நுகர்வு விஷயத்தில் குறிக்கோளை எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே, பெட்ரோலிய பொருட்களை முற்றிலுமாக ஜிஎஸ்டிக்கு அப்பாற்பட்டதாக்க வேண்டும்.
மேலும், உத்தேசிக்கப்பட்ட மசோதாவில் புகையிலை பொருட்கள் மீது மாநிலங்கள் விதிக்கும் லெவி வரி சேர்க்கப்படவில்லை. அவை மத்திய அரசின் கீழ் வருகிறது.எனவே, இந்த வரிவிதிப்பு முறையில் மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.
இந்த மசோதாவில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் காலம் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப்படி 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு காலம் முதல் 3 ஆண்டுகளுக்கு 100 சதவீதமும், 4வது ஆண்டில் 75 சதவீதமும், 5வது ஆண்டில் 50 சதவீதமும் இருக்கும் என்று தெரிகிறது. இது எங்களுக்கு ஏற்புடையது அல்ல.மாநிலங்களுக்கு நிரந்தரமாக ஏற்படும் இழப்பை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக 100 சதவிகித இழப்பீடு தரவேண்டும்.
கடந்த காலங்களில் வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டபோதும், விற்பனை வரி குறைக்கப்பட்டபோது, மாநிலங்களுக்கு அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில்ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்டால் பெரும் இழப்பு ஏற்படும்.
எனவே, மாநிலங்கள் ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி போன்றவற்றில் மாநிலங்களிடையிலான 4 சதவிகிதத்தை இழப்பீட்டு தொகையாக பெற அனுமதிக்கப்படவேண்டும்.மேலும் மற்றொரு முரண்பாடாக, இந்த மசோதாவில் மாநிலங்களுக்கிடையில் ஆன 2ஆண்டுகளுக்கு ஒரு சதவிகித விற்பனை வரி பெருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு கூடுதலாக ஒரு சதவிகித லெவி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுஎங்களுக்கு ஏற்புடையது அல்ல. இந்தவிஷயத்தில் மாநிலங்களுக்கு 4 சதவிகிதம் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.இறுதியாக, ஜிஎஸ்டி தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதாவை அமுல்படுத்துவதற்குமுன்,வரி விகிதம் போன்ற விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவேண்டும்.மேலும், மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய அதிகாரம்அளிக்கப்பட்ட குழுவை அமைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த விஷயத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் முன், மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தை போக்க, உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்கவேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.