எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 4 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணை துவங்குகிறது. முன்னாள் அமைச்சர் ராசா, தி.மு.க எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா, மற்றும் 11 பேரும் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி முன்னிலையில் ஆஜராகிறார்கள். அப்போது வாத, பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா முதலில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சி ரூ. 214 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், அக்கட்சியின் எம்.பியுமான கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தயாளு அம்மாள் மற்றும் கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கலைஞர் டி.வியின் பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை சி.பி.ஐ. கோர்ட் முதலில் நிராகரித்தது. பிறகு இவர்கள் டெல்லி ஐகோர்ட்டை அணுகினார்கள். ஆனால் இவர்களை ஜாமீனில் விடக் கூடாது. அப்படி விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள் என்று சி.பி.ஐ. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டிலும் கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக இவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கும் சென்றார்கள். அங்கும் இவர்களது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த பிறகு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யுங்கள் என்று இவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுரை கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி இந்த வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதாவது கடந்த ஜூன் 10 ம் தேதியன்று இந்த வழக்கில் கடைசியாக விசாரணை நடந்தது. இப்போது கோடை விடுமுறைக்கு பிறகு சர்ச்சைக்குரிய இந்த ஊழல் வழக்கில் இன்று முதல் மீண்டும் விசாரணை தொடங்கவிருக்கிறது.
இந்த வழக்கில் கைதாகி உள்ள ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரோமோட்டர் சாஹித் உஸ்மான் பல்வா மற்றும் 11 பேரும் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் ஆஜராகிறார்கள். இந்த வழக்கை பிரத்யேகமாக கவனித்து வருபவர்தான் சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. ஷைனி. இவரது முன்னிலையில் இன்று அனைவரும் ஆஜராகிறார்கள். இன்று சர்க்கார் தரப்பு வழக்கறிஞரும், எதிர் தரப்பு வழக்கறிஞரும் தங்களது வாத பிரதிவாதங்களை எடுத்து வைப்பார்கள். நேற்று வரை ஆவணங்கள் அனைத்தையும் சரி பார்க்கும் பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இதுவரை சி.பி.ஐ. 2 குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.
அதில் 14 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3 வது குற்றப்பத்திரிக்கை இந்த மாதம் 2 வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. அந்த குற்றப்பத்திரிக்கையில் தயாநிதி மாறன் பெயரும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், செல்போன் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டது, பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் தயாநிதி மாறன் மீது கூறப்பட்டுள்ளன. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார். பிரதமரையும் சந்தித்து இது குறித்து விளக்கமளித்தாராம். ஆனால் பிரதமர் அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று பிரதமர் கேட்டுக் கொண்டாராம். அதற்கு தயாநிதி மாறன், நான் நிரபராதி. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டாராம். இருப்பினும் விரைவில் நடக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது தயாநிதி மாறன் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் இன்று 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணை தொடங்குகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 2 ம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, பல்வா, சித்தார்த்த பெகுரா, ஆர்.கே. சந்தோலியா, சஞ்சய் சந்திரா, டி.பி. ரியாலிட்டி பிரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது குற்றப்பத்திரிக்கையிலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட