எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு - இலங்கை அதிபர் மாளிகையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய்களை கட்டுக் கட்டாக அதிகாரிகள் கைப்பற்றி மீட்டனர். மேலும் அரசு கருவூலத்திலும் ராஜபக்சே கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ராஜபக்சேவை திட்டமிட்டு தோற்கடித்தன. முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே அவசர நிலையை கொண்டு வந்து ராணுவத்தின் பின்னணியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ராஜபக்சே திட்டம் தீட்டினார். ஆனால் அவரது திட்டத்திற்கு ராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து விட்டனர்.
இதனால் வேறு வழியின்றி தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து ராஜபக்சே வெளியேறினார். இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற சிறீசேனாவின் அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசு அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது அதிபர் மாளிகையில் ராஜபக்சே குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதிபர் மாளிகையில் ராஜபக்சே ரகசிய அறைகளை கட்டி இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தோல்வி அடைய போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ராஜபக்சே குடும்பத்தினர் பலர் தங்களது சொகுசு கார்களை வெளிநாட்டிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சூழலில் அதிபர் மாளிகையில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு ராஜபக்சேவின் ரகசிய அறையில் பதுக்கியிருந்த ரூ.1500 கோடி ரொக்கப் பணத்தை கட்டுக்கட்டாக மீட்டுள்ளனர். இதில் ஏராளமான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் அடங்கும். அதிகாரிகள் மேலும் நடத்திய சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் உள்ள கருவூலத்தில் அதிபர் கட்டுப்பாட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் கோடி பணத்தில் வெறும் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் ரூ.13 ஆயிரம் கோடியை சுருட்டியிருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த ராஜபக்சே எந்த வித ஆவணங்களும் இன்றி பணத்தை கையாண்டுள்ளதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி மோசடி மற்றும் கணக்கில் வராத பணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சிறீசேனா அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையின் பெட்ரோலிய நிறுவனத்திற்கும், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கிக்கும் இடையே 7.5 பில்லியன் ரூபாய் அளவுக்கு ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. 2013ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால் பெட்ரோலிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்த ஆவணங்கள் பெட்ரோலிய நிறுவனத்தில் உள்ள 5 அறைகளில் இருப்பதாகவும், அவற்றை அழிக்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த 5 அறைகளையும் மூடுமாறு இலங்கை மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், விமானங்களை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ராஜபக்சே ஆட்சியில் அவரது மகன் நமல், சகோதரர் பசில் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் கட்டணம் செலுத்தாமல் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அதில் நாடாளுமன்ற உறுப்பினரான நமல் அதிகபட்சமாக 24 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அவர் பெல் 412 மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளார். நமல், பசில், விமல் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை செய்த விமான பயணத்திற்கான நிலுவைத் தொகை மட்டும் ரூ. 830 லட்சம் ஆகும். இதற்கிடையில் சீசெல்ஸ் தீவில் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் வாங்கி குவித்துள்ள சொத்துகள் குறித்தும் விசாரணை நடத்தவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பொருளாதார அமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்சே குடும்பத்தினர் சுவிஸ் வங்கிகளில் போட்டுள்ள பணம் குறித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஹர்சா தெரிவித்தார். இதனால் ராஜபக்சேவுக்கு எதிரான விசாரணை மேலும் விரைவுபடுத்தப்படும் என தெரிகிறது.
ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை நடத்திய செய்திகளை இலங்கை டெலிவிஷன் நாள்தோறும் ஒளிபரப்பி வருகிறது. மேலும் ராஜபக்சேவின் சொந்த ஊரான தெற்கு மாகாணத்தில் தங்காலே என்ற இடத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் ராஜபக்சேவின் சொத்துக்களை முடக்குவதற்கு சிறீசேனாவின் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப