முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ராம்பூர் - கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தடை உத்தரவை மீறியது தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இந்த வழக்கு தொடர்பாக ராம்பூர் மாவட்ட நீதிபதி பி.கே. கோயல் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

முக்தார் அப்பாஸ் நக்விக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராம்பூர் தொகுதியில் முக்தார் அப்பாஸ் நக்வி போட்டியிட்டார். அப்போது உள்ளூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தடையை மீறி நக்வி தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து நக்வி உள்பட 19 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ராம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் நக்வி உட்பட 19 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 14ம் தேதி தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து