முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசு வீதமும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டன. விலை நிர்ணய உரிமையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்ட்டது. அதனால் அடிக்கடி பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன.

இப்போது தான் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்து வருகின்றன. கடந்த 3ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 வீதமும், டீசல் விலை ரூ.2.25 வீதமும் குறைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டு வாரம் கூட நீடிக்கவில்லை. காரணம் நேற்று மீண்டும் விலைகள் உயர்த்தப்பட்டன. பெட்ரோல் விலை லிட்டருக்க 82 காசு வீதமும், டீசல் லிட்டருக்கு 61 காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளன.

அதாவது பெட்ரோல் விலை 6 மாதங்களுக்கு பிறகும் டீசல் விலை 7 மாதங்களுக்கு பிறகும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பு கிட்டத்தட்ட 9 முறை பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டு வந்தன. நேற்று மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து