எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த 113 ஜோடி மணமக்களுக்கு 72 வகை சிர்வரிசைகளுடன் பசு மாடும், கன்றும் வழங்கி திருமணம், தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்றது. ஏழாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மணவிழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமை வகித்து 113 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். 113 ஜோடி மணமக்களுக்கும் திருமாங்கல்யத்தை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். தஞ்சை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் , தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி வரவேற்புரை ஆற்றினார். கழக விவசாயப் பிரிவு தலைவர் துரை. கோவிந்தராஜன், கழக விவசாயப்பிரிவுச் செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து முன்னிலை வகித்தார்.
மணமக்களை வாழ்த்தி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதி மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சிவபதி, முருகுமாறன், இளசை.ரவிச்சந்திரன், இரா.துரைக்கண்ணு, எம்.ரெத்தினசாமி, துரை.மணிவேல், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜி.தங்கப்பன், அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தாமரை.ராஜேந்திரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், தஞ்சை தொகுதி செயலாளர் துரை.திருஞானம் , மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, தமிழ்நாடு கயறு கூட்டுறவு இணையத் தலைவர் எஸ்நீலகண்டன், ஆகியோர் பேசினார்கள். மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி நன்றியுரை ஆற்றினார்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த 113 ஜோடி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, மணமக்களுக்கு பட்டுப்புடவை, மணமகனுக்கு பட்டுவேட்டி, பட்டுச்சட்டை, பசுமாடும் கன்றும் , கட்டில், மெத்தை, பீரோ, டேபிள் பேன், காமாட்சி விளக்கு ஒன்று, குத்து விளக்கு இரண்டு, மண்விளக்கு ஒன்று, படி ஒன்று, சொம்பு ஒன்று, தூபக்கால் ஒன்று, பூஜை தாம்புலத்தட்டு ஒன்று, பூஜைக்கூடை ஒன்று, பூஜை மணி ஒன்று, பட்டுப்பாய் ஒன்று, ஜமுக்காளம் ஒன்று, பெட்ஷீட் ஒன்று, தலையணை இரண்டு, குக்கர் ஒன்று, தோசைக்கல் ஒன்று, பூரி டப்பா ஒன்று, மசால் டப்பா ஒன்று, டிஸ், குழிக்கரண்டி இரண்டு, தோசை திருப்பி, அன்னக்கை, மீன் கரண்டி, சாரணி, ஸ்பெஷல் லோட்டா, டம்ளர் இரண்டு, ஜாடி, ஜக்கு, சோப்பு டப்பா, எவர்சில்வர் சொம்பு, பூரிக்கட்டை, கேரியர், கறித்தட்டு இரண்டு, குண்டான் மூன்று, பால் கேன், கட்டை கேன், முறுக்கு அச்சு, எஸ்.எஸ்.சல்லடை, கலர் சாஸ்பன், முறம், சாப்பாடு தட்டு இரண்டு, சி.டி. தட்டு இரண்டு, பருப்பு சட்டி, கடாய், தேக்சா இரண்டு, பூ வாலி, அரிவாள்மனை, இடுக்கி, தேங்காய்திருவி, ஊதாங்குழல், இட்லிப்பானை, சம்படம் இரண்டு, கொத்து சட்டி, சில்வர் குடம், தவளை, மூடி இரண்டு, ஹாட்பாக்ஸ், குவளை, தாம்பாலத்தட்டு, சிப்சர், குழித்தட்டு ஆகிய 72 வகை சிர்வரிசைகளை அமைச்சர் வைத்திலிங்கம் மணமக்களுக்கு வழங்கினார்.பின்னர் மணமக்களுக்கும் அவர்களது உற்றார் உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என்.இராமச்சந்திரன், கே.பஞ்சவர்ணம், எம்.ஜி.எம்.சுப்பிரமணியம், இராம.இராமநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் கோ.தேவதாஸ், மாவட்ட கழக துணைச் செயலாளர் பொன் முத்துவேல், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.வி.கோபால், மாவட்ட பிரிவுச் செயலாளர்கள் எம்.ஜெயபிரகாஷ் நாராயணன், ஆ.மலைஅய்யன், மா.சேகர், டி.கே.சாமிஅய்யா, வீ.புண்ணியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் எஸ்ஆர்.ஜவஹர்பாபு, ஒன்றிய நகர கழகச் செயலாளர்கள் வீ.பண்டரிநாதன், துரை.வீரணன், ஆர்.சத்தியமூர்த்தி, துரை.செந்தில், பீ.சுப்ரமணியன், உ.துரைமாணிக்கம், குழ.சுந்தர்ராஜன், வீ.கே.டி.பாரதி, என். இளங்கோவன், ஏ.வி.சூரியநாராயணன், அசோக்குமார், அழகு த.சின்னையன், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் எஸ்பிரகாசம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், மகளிர் அணியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.