முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடியில் இருந்து தள்ளி ஓரின சேர்க்கையாளரை கொன்ற தீவிரவாதிகள்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

பெய்ரூட் - ஈராக், சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களையும் எதிரிகளையும் கொடூரமாக கொன்று வருகிறார்கள்.

தற்போது ஓரின சேர்க்கையாளர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். சமீபத்தில் சிரியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை கொலை செய்தனர். இப்போது மேலும் ஒருவரை கொன்றுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவரை அடுக்குமாடி மாடியில் நிறுத்தி அங்கிருந்து அவரை கீழே தள்ளி விட்டனர். இதில் உடல் சிதறி அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை காட்சியை காண்பதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் மாடியில் இருந்து அவரை தள்ளி விட்டனர். அவருடைய இரு கண்களையும் துணியால் மறைத்து கட்டியிருந்தனர். மேலும் இரு கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து