முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெஷாவர் பள்ளியில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 138 மாணவர்கள் பலியாகினர். சம்பவத்துக்கு பின் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.குறுகிய காலத்தில் 70க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில், அவர்களின் முகாம்களை கண்டறிந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானின் திராக் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20 தீவிரவாதிகள் பலியாகினர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 3 பேர் தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை அழிக்கப்பட்டன.

சில தினங்களுக்கு முன்பு வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து