முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கம்: நரகத்தை பார்த்தது போல் இருந்தது உயிர்தப்பிய பெண்கள் பேட்டி

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

நகரி, நேபாளம் பூகம்பத்தில் சிக்கிய ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா குழுவினர் இந்திய விமானப்படை உதவியால் மீட்கப்பட்டு பத்திரமாக ஐதராபாத் திரும்பினர். இதில் ஐதராபாத் ஹயத் நகரை சேர்ந்த 35 பேர் கிழக்கு கோதாவரியை சேர்ந்த 19 பேர் இடம்பெற்று இருந்தனர். ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்த அவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றனர். நேபாளம் சேதங்களை பார்க்கும் போது நரகத்தை நேரில் பார்த்தது போல இருந்ததாக அவர்கள் பீதியுடன் தெரிவித்தனர்.

சத்திய நாராயணமூர்த்தி என்பவர் கூறுகையில், நாங்கள் பசுபதி நாதர் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய போது பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்த்த போது எனது இதய துடிப்பே நின்று விட்டது. பல கட்டிடங்கள் எங்கள் கண் முன்னாலே சரிந்து விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். நாங்கள் நின்ற பகுதியும் குலுங்கியது. பயத்தில் தலைதெறிக்க ஓடினோம். எங்களை போல வீடுகளில் இருந்த மக்கள் எல்லோரும் வீட்டில் இருந்துவெளியேறி ஓடிவந்தனர்.  தங்கள் கண்முன்னாலே உறவினர்கள் கட்டிட இடிபாடுகளில் புதைந்து போனதை கண்டு அவர்கள் கதறி அழுதது நினைத்து பார்க்கவே அச்சமாக இருந்தது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து