முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பா.ஜ. எம்.பி. கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

ஹரித்துவார்: ராகுல் காந்தி மாட்டு இறைச்சி சாப்பிட்டு கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டதாக எம்.பி.கிண்டல் செய்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்ஷி மகாராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பாஜ சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ஹரித்துவாரில் நேபாள பூகம்பம் குறித்து நிரூபர்களிடம் கூறும்போது, ராகுல்காந்தி மாட்டு இறைச்சி சாப்பிட்டு விட்டு புனிதமான கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். இதனால் தான் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது என்றார். மேலும் இந்துக்களின் ஜனத்தொகையை பெருக்க ஒவ்வொரு இந்து பெண்ணும் 4 குழந்தைகள் பெறவேண்டும் என்றும் சாக்ஷி மகராஜ் கூறினார். அவரது இந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து