எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி: ஐ.பி.எல். போட்டியின் 2வது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஐ.பி.எல். முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்தது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கெய்ல், கேப்டன் கோஹ்லி களமிறங்கினர். முதல் 2 ஓவர்களை இருவரும் வெளுத்து விளையாடி மிரட்டினர். ஆனால் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களோ உஷாராக பந்துவீசி மடக்கத் தொடங்கினர். இதனால் பெங்களூரு அணியின் தொடக்க வேகம் அப்படியே முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது சென்னை அணி. 4.1வது ஓவரில் கோஹ்லியும் அதே ஓவரின் கடைசி பந்தில் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸும் அவுட் ஆனதால் பெங்களூரு நிலைகுலைந்தது. கோஹ்லி 12 ரன்களிலும் டிவில்லியர்ஸ் ஒரே ஒரு ரன்னையும் எடுத்து அவுட் ஆனார்.
இதேபோல் மந்தீப் சிங் சிறிது நேரமே நின்ற நிலையில் அவுட் ஆனார். ஆனால் தொடக்க வீரரான கிறிஸ் கெய்ல் மட்டும் நிலைத்து நின்று நிதானமாக ரன்களைக் குவித்து அரை சதத்தை நோக்கி பயணித்தார். அவர் 43 பந்துகளில் 41 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சற்று விறுவிறுப்பாக விளையாடி தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆனார். பின்வரிசை வீரர்களும் நிலைத்து ரன்களைக் குவிக்கவில்லை. கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை பெங்களூரு அணி பறிகொடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்பு 139 ரன்களை எடுத்தது.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் ஹஸ்ஸியும் நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஆனால் ஸ்மித் 3.1 ஓவரில் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்ஸியுடன் டூபிளெஸ்சிஸ் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களை குவிக்கத் தொடங்கினர். 22 பந்துகளில் 21 ரன்களை எடுத்த நிலையில் டூபிளெஸ்சிஸ் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்களை எடுத்தது.
ஹஸ்ஸியுடன் இணைய வந்த ரெய்னா அதே வேகத்தில் ரன் ஏதுவும் எடுக்காமல் 2வது பந்தில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்ஸியுடன் கேப்டன் டோணி கை கோர்த்தார். இந்த போட்டியில் போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் சென்னை அணி பொறுப்புணர்ந்து விளையாடியே வந்தது. ஹஸ்ஸி 43 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்களை எட்டியிருந்தது.
இருப்பினும் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸ்ஸி அவுட் ஆனார். களத்தில் கேப்டன் டோணியும் நெகியும் நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தனர். 18.5வது பந்தில் நெகி 12 ரன்கள் எடுத்த நிலையிலும் 18.6வது பந்தில் பிராவோ டக் அவுட் ஆகவும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் டோணி இருக்க பயமேன் என்ற தெம்பில் சென்னை ரசிகர்கள் காத்திருந்தனர். பெங்களூரு அணியின் 139 ரன்களை எட்டியிருந்த நிலையில் கேப்டன் டோணி கடைசி ஓவரின் 4வது பந்தில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த அஸ்வின் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் அடிக்க சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோணி கூறியதாவது: 140 ரன்கள் என்ற இலக்கு, அடித்து ஆடுவதா அல்லது விக்கெட்டுகளை காத்துக் கொண்டு சீராக துரத்துவதா என்ற இரட்டை நிலையை எப்பவும் ஏற்படுத்தும். இரவு நேர பனிப்பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது. அஸ்வினுக்கு எனது பாராட்டுகள். அவர் மிகச்சிறப்பாக வீசியதாக நான் கருதுகிறேன். அவருக்கு உறுதுணையாக வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர்.
கெயிலுக்கு எதிராக ரெய்னாவை பயன்படுத்தினேன், காரணம் இடது கை ஸ்பின்னர்களை அவருக்கு எதிராக பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தோம். இந்தப் பிட்சில் இரு அணிகளுக்கும் சமமான ஸ்கோர் எது என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. இது உயர்-அழுத்த போட்டி, பெங்களூரு அணி 10 அல்லது 12 ரன்கள் குறைவாக எடுத்ததாக நான் நினைக்கிறேன். அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் பழக்கம் எங்களிடம் ஏற்பட்டுவிட்டது. சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இறுதிப் போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவோம். இவ்வாறு கேப்டன் டோணி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.