எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது என்று மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஒரு பட விழாவில் கூறினார் இது பற்றிய விவரம் வருமாறு. ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் 'கிருமி' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசைத்தட்டை வெளியிட்டு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசினார்.அவர் பேசும் போது :
" இந்தக் 'கிருமி' படத்தைத் தயாரித்து இருக்கும் ரஜினி ஜெயராமன் என்னை கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்தார். அவர் சூப்பர்ஸ்டாருடன் நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் நான் இயக்கிய 25 படங்களில் 20 படங்களில் ரஜினிக்கு உதவியாளராக இருந்தவர் இந்த ஜெயராமன் தான். நானும் சூப்பர் ஸ்டாரை வைத்து படங்கள் இயக்கியவன் என்கிற முறையில் அவரை உரிமையோடு வாழ்த்துகிறேன்.அவர் சரியாக சம்பளம் கொடுத்ததாக எல்லாரும் கூறினார்கள். அப்போது எனக்கு ஏ.விஎம், நாகிரெட்டி,ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மாடர்ன்தியேட்டர்ஸ் சுந்தரம் என எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். அந்த நேர்மையான தயாரிப்பாளர்கள் வரிசையில் ஜெயராமனும் சேர வாழ்த்துகிறேன்.
இங்கே சார்லி நன்றாகப் பேசினார். ஒருகாலத்தில் அவர் பாலசந்தரிடம் பேசவே பயந்து கொண்டு இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது தைரியமாகப் பேசுகிறார். வளர்ந்து இருக்கிறார். இங்கே இருக்கிற நடிகை வனிதா மிகவும் தைரியசாலி. ஒரு முறை என் படத்தின் படப்பிடிப்பு ஒன்று குற்றாலம் மலையில் நடந்தது. அதில் நடிக்கும் ஒய். ஜி. மகேந்திரன் மலையில் மேலே போகப் பயந்தார். எப்படிப் போவது என்று அவர் பயந்த போது வயதான ஒருவர் லட்சுமி நாராயணன் என்பவரை மேலே போக வைத்தேன். அவரை மேலே கொண்டு சேர்த்தது யார் தெரியுமா? இந்த வனிதாதான். அப்புறம்தான் ஒய்.ஜி.மகேந்திரன் மலையில் ஏறினார். அந்த அளவுக்கு மிகவும் துணிச்சலான நடிகை இந்த வனிதா.
படப்பிடிப்பின் போது மட்டும் தான் எங்கள் குழுவினர் பரபரப்பாக இயங்குவார்கள் படப்பிடிப்பு எல்லாம் முடிந்ததும் நண்பர்களைப் போல மாறி விடுவோம். நான் எழுபது படங்கள் இயக்கி இருக்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து 25 படங்கள், கமலை வைத்து 10 படங்கள், நடிகர் திலகத்தை வைத்து 3 படங்கள் இயக்கியிருக்கிறேன்.
இவை எப்படி முடிந்தது அந்தப் படங்கள் எல்லாம் எஸ்.பி முத்துராமன் என்கிற தனிப்பட்ட நபரின் வெற்றியல்ல,சாதனையல்ல. எல்லாமே எஸ் பி.எம். என்கிற படக்குழுவின் வெற்றி. இவை எப்படி முடிந்தது?. நன்கு திட்டமிட்டு எடுத்ததால்தான் முடிந்தது. திட்டமிட்டு படமெடுத்தால் நஷ்டம் வராது ,வெற்றி நிச்சயம். இதை எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் கதை 'காக்கா முட்டை' மணிகண்டனின் கதை என்றார்கள். அவர் நமது பெருமையை உயர்த்தும்படி படம் எடுத்து இன்று பாராட்டைப் பெற்று வருகிறார்.அவரது கதையை இயக்கியுள்ள அனுச்சரணையும் என்னையும் மிஞ்சி வாழ்க என வாழ்த்துகிறேன்" என்றார்.அதுமட்டுமல்ல படக்குழுவினரின் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டும் வாழ்த்தினார். விழாவில் நக்கீரன் கோபால் பேசும் போது
''இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெயராமன் எனக்கு நெருங்கிய நண்பர்.நான் அண்ணன் ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். ஒரு இடத்தில் இருக்க மாட்டார். ஓடிக் கொண்டே இருப்பார். ஜெயராமன் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குபவர். மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' சமூகநோக்குள்ள படம் அதில் இப்படி ஒரு சமூகத்தோடுதான் வாழ்ந்து வருகிறோம் என்று அழகாகச் சொல்லியிருப்பார்.அந்த மணிகண்டனின் கதை என்பதால் இந்தக்'கிருமி'யும் சமூகம் சார்ந்த சிந்தனையோடுதான் இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
இன்று படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஆனால் டிவிக்காரர்கள் படத்தை வைத்து சம்பாதிக்கிறார்கள். 'பாட்ஷா' படத்தை தயாரித்த அண்ணன் ஆர் எம்வீ இப்போது வீட்டில்தான் இருக்கிறார். ஆனால் சன்டிவியில் ஒருநாள் போடுகிற போதெல்லாம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். 'கில்லி'படத்தை தயாரித்த அண்ணன் ஏ.எம். ரத்னம் வீட்டில்தான் சாதாரணமாக இருக்கிறார். ஆனால் சன்டிவியில் ஒருநாள் போட்டு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள்.இந்தப் படத்தை தயாரிக்கும் ஜெயராமன் நேர்மையாக சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்கள்.நேர்மையாக உள்ளவர்கள் வெற்றிபெற வேண்டும்.தயாரிப்பாளர் ஜெயராமன் வெற்றிபெற நக்கீரன் என்றும் துணைநிற்கும் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.'' என்றார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ,துணைத்தலைவர்கள். பி.எல் தேனப்பன், கதிரேசன். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சார்லி, படத்தின் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மேனன், நடிகை வனிதா, பாடகர் கானாபாலா, இசையமைப்பாளர் கே, 'காக்கா முட்டை' மணிகண்டன், 'கிருமி' யை இயக்கியுள்ள அனுசரண், ஒனிப்பதிவாளர் அருள் வின்சென்ட்,பாடலாசிரியர் ஞானகரவேல்,
தயாரிப்பாளர்கள் ரஜினி ஜெயராமன், கோவை ஜெயராமன், பிருத்திவிராஜ், ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.இறுதியாக 'கிருமி'யை இயக்கியுள்ள அனுசரண் நன்றி கூறினார்.விழாவில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் ரஜினி மன்ற நிர்வாகிகளும் மட்டுமல்ல விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட