எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, புதுவை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திடீர் திருப்பமாக கோகுலகிருஷ்ணன் அ தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அ தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி 28.9.2015 அன்று புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, ரெட்டியார்பாளையம், உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த என்.கோகுல கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் கண்ணனின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 28–-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10–-ம் தேதி தொடங்கியது.வருகின்ற 18–-ம் தேதி மாலையுடன் வேட்புமனு தாக்குதலுக்கான காலக்கெடு முடிவடைந்து, 19–-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 21-–ம் தேதி கடைசி நாள். 28-–ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் அப்போதே எண்ணப்பட்டு 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் வேட்பாளரை மூன்று எம்.எல்.ஏக்களும், சுயேட்சை வேட்பாளர் எனில் பத்து எம்.எல்.ஏக்களும் முன்மொழிய வேண்டும். அப்படி முன்மொழியப்படவில்லை என்றால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். புதுவையைப் பொருத்தவரை ஆளும் கட்சியான ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத்தான் சுயேட்சை எம்.எல்.ஏ.வையும் சேர்த்து 16 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுக்கு 15 எம்எல்ஏக்களும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும், அண்ணாதிமுகவுக்கு 5 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்களும், திமுகவுக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதனால், ஆளுங்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெறும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். திமுக சார்பில் ஜெகத்ரட்சகனை நிறுத்த திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் ரங்கசாமி இல்லத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக கோகுலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதற்கு சில எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த சூழ்நிலையில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் திடீர் திருப்பமாக அண்ணாதிமுகவில் இணைந்தார்.
புதுச்சேரி மாநிலம், உழவர்கரை சட்டமன்றத் தொகுதி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த என்.கோகுலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று தன்னை அண்ணா தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அப்போது புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ., அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.அதைதொடர்ந்து அ திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன் தேர்தல் அதிகாரி மோகன் தாசை சந்தித்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளருக்கான அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டது. வேட்பு மனுவில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புருஷோத்தமன், அன்பழகன், ஓம்சக்தி சேகர், பாஸ்கர், பெரியசாமி ஆகியோர் முன் மொழிந்து கையெழுத்திட்டிருந்தனர். முன்னதாக கதிர்காமம் முருகன் கோவிலுக்கும் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கும் வேட்பாளர் கோகுல கிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் காமராஜ், எம்.சி. சம்பத் ஆகியோர்சென்று வழிபாடு நடத்தினார்கள்.
பின்னர் அங்கிருந்து தேர்தல் அதிகாரியிடம் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அ தி.மு.க. வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. புதுவையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் போன்று ஏற்கனவே 1977–ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தார். புதுச்சேரி முதல்வராக ராமசாமியும், கவர்னராக குல்கர்னியும் பதவி வகித்தனர். அப்போது இதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டதால் எம்.ஜி.ஆர். உதவி நாடப்பட்டது. அப்போது தலித் சமூகத்தை சேர்ந்த வி.பி.எம். சாமி என்பவரை எம்.ஜி.ஆர். வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையின்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஜெயலலிதாவின் உதவியை நாடி கோகுலகிருஷ்ணனை அ தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கச் செய்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.