எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்ற தொடக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் .வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ,ப., முன்னிலையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் ரூ.68 லட்சம் செலவில் ஒரு நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில பாளையங்கோட்டையில், 25 நீதிமன்றங்களும் தென்காசி, 5 நீதிமன்றங்களும் அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 4 நீதிமன்றங்களும் உட்பட மொத்தம் 47 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 47 நீதிமன்றங்களில் 44 நீதி மன்றங்கள் சொந்த அல்லது அரசு கட்டிடங்களில் இயங்கி வருகிறது. நீதித்துறை சுதந்திரமாகவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் புரட்சித்தலைவி அம்மா நீதி நிர்வாகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
புரட்சித் தலைவி அம்மா கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 223 புதிய நீதிமன்றங்களை உருவாக்கிட உத்தரவிட்டதுடன் இதற்க்கு ரூ.58.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 9 நீதிமன்றங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 2016 – 17ம் ஆண்டில் உளுந்தூர் பேட்டை, காங்கேயம் மற்றும் ஆலந்தூரில் தலா ஒரு சார்பு நீதிமன்றம் ரூ.2.94 கோடியில் அமைப்பதற்க்கும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ரூ.8.69 கோடியில் கூடுதலாக மூன்று தளங்கள் அமைக்கவும், சாத்தான்குளத்தில் ரூ.5.55 கோடியில் நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள் அமைப்பதற்கும், திருவள்ளுரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.23.50 கோடியில் கட்டுவதற்கும், திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ரூ.33.75 கோடியில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு தேவையான ஊஊவுஏ கேமாரக்கள் கம்பியூட்டர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க ரூ.45.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அம்மா அவர்களால் புதிய பல சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 25 குடும்பநல நீதிமன்றங்கள் ஒப்பளிக்கப்பட்டு 20 நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது திருநெல்வேலியிலும் ஒரு நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 32 நீதிமன்றங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் 22 நீதிமன்றங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டது. பெண்கற்பழிப்பு, கொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு 08.01.2013 அன்று மகளிர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டது.
அதற்கு முன்பாகவே அம்மா 1.1.2013 அன்று தமிழகத்தில் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டார்கள். தேங்கி கிடக்கும் சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலுர் மாவட்டம் தவிர 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இது போல மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் 32 தமிழகத்தில் உள்ளது.
மத்திய அரசு நிதியுதவி அளிக்க இயலாது என தெரிவித்த 49 விரைவு நீதிமன்றங்களையும் மாவட்ட நீதிமன்ற தகுதிக்கு தரம் உயர்த்தி நிரந்தர நீதிமன்றங்களாக அம்மா உத்தரவிட்டார்கள். நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதி குடியிருப்புகள் அமைப்பது போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.511.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.93 கோடி மட்டுமே மத்திய அரசின் பங்காகும். 2014 ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் 15,08,767 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.915.07 கோடி தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.70 கோடி செலவில் அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. வழக்குறைஞர்களின் நலன் கருதி சேமநல நிதியை உயர்த்தி வழங்கியது. 5 ஆண்டுகளில் 213 அரசு உதவி வழக்கு நடத்துனர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது உள்ளிட்ட பல திட்டங்களை அம்மா செயல்படுத்தியுள்ளார்கள். ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டதும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் துவக்கப்பட்டுள்ளதால் ஆலங்குளம் பகுதி பொது மக்களின் நிலுவையிலுள்ள வழக்குகள் விரைந்து நிவாரணம் பெற இயலும் - எனப் பேசினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:-
அம்மா துறை தோறும் புதுமைகளையும் வித்தியாசமான திட்டங்களையும் தினந்தோறும் செய்வதையே தனது லட்சிய நோக்கமாக கொண்டவர். தமிழகத்தில் சட்டத்துறையில் நல்ல பல திட்டங்களை சீரிய முறையில் செய்து வந்தவர்கள் அம்மா அவர்களின் ஆட்சியில் தான் சென்னை உயர்நீதி மன்றத்தினுடைய நீதிபதி சட்டமன்றத்தில் நடைபெற்ற பெருமை வாய்ந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறச் செய்த பெருமை அம்மா அவர்களையே சாரும். ஆலங்குளம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு நிலுவைகளில் உள்ள பொது மக்கள் விரைவில் நிவாரணம் பெறுவார்கள் எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையாபண்டியன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன்,இ.கா.ப., தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ராஜமாணிக்கம், ஆலங்குளம் நீதிமன்ற நடுவர் பிச்சைராஜன், ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சுதாபரமசிவன்,பரணிசங்கரலிங்கம்,இ.நடராஜன்,சண்முக சுந்தரம், திருநெல்வேலி மாவட்ட அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து, ஆவின் சேர்மன் ரமேஷ், கண்ணன், எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம், சேர்மபாண்டி, பாண்டியராஜ், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.